Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

இந்த தேசிய விருதை மறைந்த நடிகர் புனித் ராஜ் குமாருக்கு சமர்ப்பிக்கிறேன்… காந்தாரா நடிகர் ரிஷப் ஷெட்டி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

2022 ஆம் ஆண்டு ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்து வெளியான ‘காந்தாரா’ என்ற கன்னடத் திரைப்படம் பிற மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இந்த திரைப்படம் சுமார் 400 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. நேற்று அறிவிக்கப்பட்ட 70வது தேசிய விருதுகளில், சிறந்த நடிகருக்கான விருதும், சிறந்த என்டெர்டெயின்மென்ட் திரைப்படத்திற்கான விருதும் என இரண்டு விருதுகளைப் பெற்றது.

தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, நேற்று பெங்களூருவில் பத்திரிகையாளர்களை சந்தித்த ரிஷப் ஷெட்டி, இவ்விருதுகளை மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார், தெய்வீகத்தையும் தெய்வ நர்த்தகாஸையும், கன்னட ரசிகர்களையும் அர்ப்பணிக்கின்றேன் என்று அறிவித்தார். தெய்வ நர்த்தகாஸ் என்றால் தெய்வத்தின் சேவைக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்ட நடனக் கலைஞர்கள் என்று பொருள்.

மேலும் அவர் தனது பேச்சில், “ஆரம்பத்திலிருந்தே இந்த விருதுகளை நான் புனித் ராஜ்குமார், கன்னட மக்கள், நடனக் கலைஞர்கள் ஆகியோருக்குப் அர்ப்பணிப்பக்கிறேன். ஹொம்பலே பிலிம்ஸ் மற்றும் காந்தாரா குழுவினருக்கும் எனது நன்றியை தெரிவிக்கிறேன். ஹொம்பலே பிலிம்ஸ் நிறுவனம் நான்கு விருதுகளைப் பெற்றுள்ளது. தேசிய விருதுகள் அறிவிக்கப்படும் போது, எனக்கான விருது அறிவிக்கப்பட்டதைக் கேட்டு, என்னுள் ஒரு சிலிர்ப்பு தோன்றியது.

கன்னடத் திரையுலகம் மிகுந்த வளர்ச்சி அடைந்து வருகிறது, இதன் விளைவாக இவ்விருதுகள் கிடைத்துள்ளன. படக்குழுவின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எனது நன்றியை தெரிவிக்க விரும்புகிறேன். ஒளிப்பதிவாளர் மற்றும் காஸ்ட்டியூம் டிசைனராகப் பணியாற்றிய எனது மனைவி பிரகதி ஷெட்டி உள்ளிட்ட பலர் இந்த வெற்றிக்கு காரணம். அஜனீஷ் லோகநாத்தின் இசை மிகவும் முக்கியமானது. அனைத்து நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகியோருக்கும் எனது நன்றியை தெரிவிக்கிறேன்.

மக்கள் படத்தை ரசிக்கும் போது நமக்கு பொறுப்பும் அதிகமாகிறது. விருதுகள் கிடைக்கும் போது அந்தப் பொறுப்பு மேலும் அதிகமாகிறது. விருது அறிவிக்கப்பட்டவுடன் எனது மனைவிதான் முதலில் என்னை வாழ்த்தினார், அது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளித்தது. ‘கேஜிஎப்’ திரைப்படத்தின் நாயகன் யஷ் உடனடியாக போன் செய்து வாழ்த்தினார். எனது மகள் பிறந்தபோது அனைவரும் அவளை மகாலட்சுமி என்று கூறினர். தற்போது வரமகாலட்சுமி விழா நாட்கள் என்பதால், அந்த மகிழ்ச்சி இரட்டிப்பாகி உள்ளது,” என்று தனது மகிழ்வை பகிர்ந்து கொண்டார்.

- Advertisement -

Read more

Local News