Tuesday, September 17, 2024

கோட் படத்தில் விஜயகாந்த் பங்கு முக்கியமானதாக இருக்கும்… பிரேமலதா உருக்கம்…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தளபதி நடிப்பில் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் கோட் படம் உருவாகி வருகிறது, இதில் பல பிரபல நடிகர்கள் நடித்துள்ளனர். இதில் ஐந்து சிறப்பு தோற்றங்கள் உள்ளன.அதன்படி சிவகார்த்திகேயன், திரிஷா, முக்கிய கிரிக்கெட் பிரபலம் மற்றும் வெங்கட் பிரபுவும் ஒரு சீனில் தோன்றுகிறார்கள்.இதேபோல் விஜயகாந்தும் ஒரு சிறப்பு தோற்றத்தில் அப்படத்தில் தோன்ற உள்ளார்.

தற்போது ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கேப்டனின் காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளது.அவரின் காட்சிகள் இரண்டு நிமிடத்திற்கு மேல் இருக்கும் எனக் கூறப்படுகிறது, மேலும் அவை கிளைமாக்ஸுக்கு முன்பான முக்கிய தருணங்களில் இடம்பெறும்.அந்தக் காட்சியும் கேரக்டரும் படத்திற்கு மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என தகவல்கள் வெளியானது.

சுருக்கமாகச் சொல்வதானால், கேப்டன் இல்லாமல் கோட் கதையே இல்லை என்பதாக இருக்கும்.இந்தக் காட்சிகளை வெங்கட் பிரபு தற்போது பிரேமலதாவிடம் காண்பித்துள்ளார். அவர் அதை பார்த்து ஆச்சரியப்பட்டு நெகிழ்ச்சி அடைந்துள்ளார்.

அந்த அளவுக்கு கேப்டன் உண்மையாக நடித்தது போல் அந்த காட்சி இருந்தது என அவர் கூறியுள்ளார்.படம் வெளியான பிறகு அது மிகப்பெரிய அளவில் பேசப்படும் என்பதில் சந்தேகம் இல்லை.இதற்காகவே ரசிகர்கள் கோட் படத்தின் வெளியீட்டை ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கின்றனர்.

- Advertisement -

Read more

Local News