நடிகை பாவனா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர். தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பாவனா, தொடர்ந்து ஜெயம் கொண்டான், வாழ்த்துக்கள், கூடல் நகர், ராமேஸ்வரம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

திருமணமான பாவனா, தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் மலையாளத்தில் ஹண்ட் என்ற படம் இவரின் நடிப்பில் வெளியாகியுள்ளது. இதற்கிடையே, பாவனா தனது கணவரை பிரிந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியானது. தற்போது பாவனா இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துகொள்ள மாட்டேன் என்றும், தன்னுடைய கணவருடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்ததில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால், தன்னுடைய கணவரை பிரிந்து தனிமையில் வாழ்ந்து வருவதாக சீரற்ற தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக பாவனா வருத்தம் தெரிவித்துள்ளார். இத்தகைய தவறான கருத்துக்களை நிரூபித்துக் கொண்டிருக்க முடியாது என்றும், இப்படி வதந்திகள் பரவுவதால் மட்டுமே கணவருடன் இணைந்திருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துக்கொள்ள முடியாது என்றும் பாவனா தெரிவித்தார். இதன் மூலம், பாவனா தனது கணவரை பிரிந்துவிட்டார் என்ற வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.