Saturday, September 14, 2024

வசூலை அள்ளிய டிமான்ட்டி காலனி-2… கேக் வெட்டிக் கொண்டாடிய படக்குழு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு வெளியான ‘டிமான்ட்டி காலனி’ திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் வெற்றியைத் தொடர்ந்து, ‘டிமான்ட்டி காலனி 2’ என்ற அதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி, 15 ஆம் தேதி வெளியானது.

இந்த படத்தில் நடிகர் அருள்நிதி, பிரியா பவானி சங்கர் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் அருண்பாண்டியன், முத்துக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிசந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.

திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. திரைப்படம் வெளியான முதல் நாளில் 3.3 கோடி ரூபாய் மேல் வசூலித்து வருகிறது. அருள்நிதி நடித்த படத்திற்கு பெரும் வரவேற்பும் வசூலும் கிடைத்து வருகிறது. சென்னையில் உள்ள பெரும்பாலான திரையரங்களில் ‘டிமான்ட்டி காலனி 2’ திரைப்படம் ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக்கொண்டு இருக்கிறது. பிரியா பவானி சங்கர் மீது சமூக வலைதளங்களில் இருந்த ‘ராசி இல்லாத நபர்’ என்ற பழிச்சொற்கள் இப்படத்தின் மூலம் மறைந்து வருகின்றன. படத்தின் வெற்றியை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர், அப்பொழுது எடுத்த புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் பகிரப்பட்டுள்ளது.

- Advertisement -

Read more

Local News