Tuesday, September 17, 2024

எங்கள் நட்பு தொடரும் யாரும் காயப்படுத்த வேண்டாம்…. ஜி.வி பிரகாஷ் – சைந்தவி விவாகரத்து விவகாரம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஜி.வி. பிரகாஷ் தமிழ் சினிமாவில் முதல் முறையாக வெயில் படத்தின் இசையமைப்பாளர் ஆக அறிமுகமானார். அவரது பென்சில், திரிஷா இல்லனா நயன்தாரா, சிவப்பு மஞ்சள் பச்சை போன்ற பல படங்கள் பெரிய வெற்றியை பெற்றன. ஆனால், ஜி.வி. பிரகாஷ் நடித்த பேச்சுலர், ஜெயில், செல்பி, அடியே போன்ற படங்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனங்கள் கிடைத்தன.

ஜி.வி. பிரகாஷ் மற்றும் சைந்தவி பள்ளி பருவத்திலிருந்தே நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்தனர். அவர்களின் நட்பு காலப்போக்கில் காதலாக மாறியது. பல வருடங்கள் காதலித்த பிறகு, 2013 ஆம் ஆண்டு பெற்றோரின் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.அன்வி என்ற ஒரு மகளைக் கொண்டுள்ள ஜி.வி. பிரகாஷ் மற்றும் சைந்தவி, விவாகரத்து செய்ய உள்ளதாக வெளியான தகவல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதனால், ஜி.வி. பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவரும் பிரிந்து வாழ முடிவு செய்துவிட்டதாக கடந்த 13-ம் தேதி அறிவித்தனர். இதனையடுத்து, யூடியூப் வீடியோக்கள் குறித்த சைந்தவி வருத்தம் தெரிவித்துள்ளார்.

அவர் தங்கள் விவாகரத்து பற்றிய கற்பனை கதைகள் வருத்தத்தை ஏற்படுத்துகின்றன.எங்களின் முடிவுக்கு மதிப்பளிக்க கோரிய பின்பும் இவ்வாறு கதைகள் உருவாகுவது வேதனையாக உள்ளது. ஆதாரமின்றி ஒருவரின் குணாதிசயத்தை சிதைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த முடிவு எங்கள் இருவரின் முன்னேற்றத்தை கருதி எடுக்கப்பட்டது. நான் மற்றும் ஜி.வி. பிரகாஷ் பள்ளிப் பருவத்தில் முதல்முறையாக நண்பர்களாக இருந்தோம், 24 வருட நட்பு. அதே நட்புடன் தொடர்வோம் என்று சைந்தவி குறிப்பிட்டுள்ளார்.

ஜி.வி. பிரகாஷ் இதுகுறித்து, “இந்த சிரமமான நேரத்தில் என்னுடன் இருக்கிறவர்களுக்கும், நண்பர்களுக்கும், என் முன்னாள் மனைவி சைந்தவிக்கும் நன்றி” என கூறியுள்ளார். இந்த அறிக்கை சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டுள்ளது.

- Advertisement -

Read more

Local News