Sunday, September 22, 2024

அமிதாப் சார் நடிக்கிறார் என்று சொன்னதும் தூக்கி வாரி போட்டது… தற்போதுள்ள 2K கிட்ஸ்களுக்கு அமிதாப் பச்சன் பற்றி தெரியாது – நடிகர் ரஜினிகாந்த்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையின் திரைப்படம் அவர் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தை இயக்குனர் ஞானவேல் இயக்கியுள்ளார் மேலும் அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தில் மஞ்சு வாரியர் பகத் பாசில் அமிதாப் பச்சன் ரானா ரகுபதி ரித்திகா சிங் அபிராமி ரக்சன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

இந்த இசை வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த் நடிகர் அமிதாபச்சனை பற்றி நெகிழ்ச்சியுடன் பேசினார். அதாவது, இயக்குனர் இந்தப் படத்தில் சத்யதேவ் என்ற ஒரு கதாபாத்திரம் உள்ளது. அந்த கதாபாத்திரத்தில் சிவாஜி அவர்கள் இருந்தால் நடித்திருப்பார் என்று சொன்னார்.பின்னர் இந்த கதாபாத்திரத்தில் அமிதாப் பச்சன் சார் நடிக்கிறார். அவர் இந்த படத்தில் நடிக்க இரண்டு நாளிலேயே ஓகே சொல்லிட்டார் என்று சொன்னதும் எனக்கு தூக்கி வாரி போட்டது.அதேபோல் வில்லன் யாரென்று கேட்டபோது ராணா என்று சொன்னார். ராணாவை வில்லனாக பார்க்கும் போது எனக்கே பயம் வருகிறது.

தற்போதுள்ள 2K கிட்ஸ்களுக்கு அமிதாப் பச்சன் குறித்து தெரியாது. அவரிடம் இருந்து நான் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன். அமிதாபின் அப்பா ஒரு மிகப்பெரிய எழுத்தாளர் செல்வாக்கு மிகுந்தவர். ராஜிவ் காந்தியும் அமிதாபும் ஒன்றாக பள்ளிக்குச் சென்றவர்கள். ஆனால் இது யாருக்கும் பெரிதாக தெரியாது. 1969ல் தான் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று அவர் தன்னுடைய பெற்றொரிடம் சொன்னார். அப்போது அவர்கள் அவருக்கு உதவவில்லை. அதன் பிறகு ஒரு தொழிலை தொடங்கி நஷ்டமானது. மும்பையே சிரித்தது. ஒரு இயக்குனரிடம் வேலைக்கு சேர்ந்தார். அங்கிருந்து பல்பொடி விளம்பரம்,ஷூ விளம்பரங்கள் என அமிதாப் கடின உழைப்பால் ஒரு மிகப்பெரிய நட்சத்திரமாக உயர்ந்தார். ஆனால் இன்றைய பெற்றோர்கள் குழந்தைகளைபணம் கொடுத்து கெடுக்கிறார்கள். குழந்தைகளுக்கு பணம் கொடுக்காமல், நல்ல குணம் கொடுங்கள்.

- Advertisement -

Read more

Local News