Touring Talkies
100% Cinema

Saturday, May 17, 2025

Touring Talkies

“தமிழகத்தின் உண்மையான ‘டான்’ உதயநிதிதான்…” – சிவகார்த்திகேயன் பாராட்டு..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தயாரிப்பாளர் போனி கபூர்  வழங்கும், ZEE STUDIOS & BAYVIEW PROJECTS உடன்  ROMEO PICTURES இணைந்து தயாரிக்க,  அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள திரைப்படம்  நெஞ்சுக்கு நீதி’.

இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், ஆரி, தன்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜசேகர், யாமினி சந்தர், சுரேஷ் சக்கரவர்த்தி, இளவரசன், மயில்சாமி, அப்துல் லீ, ராட்சசன் சரவணன் மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர்.

கதை – அனுபவ் சின்ஹா, ஒளிப்பதிவு – தினேஷ் கிருஷ்ணன்.B,  இசை – திபு நினன் தாமஸ், படத் தொகுப்பு – ரூபன், கலை இயக்கம்  – வினோத் ராஜ்குமார் மற்றும் லால்குடி N இளையராஜா, சண்டை பயிற்சி இயக்கம் – ஸ்டன்னர் சாம்,  புகைப்படங்கள்  – C.H.பாலு, பாடல்கள் – யுகபாரதி,  அருண்ராஜா காமராஜ், வசனம் –  தமிழரசன் பச்சமுத்து, நடன இயக்கம் – லீலாவதி, உடைகள் வடிவமைப்பு – அனு வர்தன், ஒலி வடிவமைப்பு சுரேன் மற்றும் அழகியகூத்தன், VFX – ஹரிஹர சுதன் (Lorven Studio), தயாரிப்பு நிர்வாகம் – S.P.சொக்கலிங்கம், உடைகள் – K.செல்வம், சிகை அலங்காரம், ஒப்பனை – சக்திவேல், விளம்பர வடிவமைப்பு – கோபி பிரசன்னா  ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

சமூக அவலத்தை சாடும் ஒரு அழுத்தமான திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது. ஹிந்தியில் வெளியான ‘ஆர்ட்டிக்கிள்-15’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்கான இந்தப் படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரெயிலர் வெளியீட்டு விழா நேற்று மாலை சத்யம் திரையரங்கத்தில் திரை பிரபலங்கள், படக் குழுவினர் கலந்து கொள்ள கோலகலமாக நடைபெற்றது.

நடிகர் R.J.பாலாஜி பேசும்போது, “நானும், உதயநிதியும் போனிகபூருக்கு படம் செய்துள்ளோம். எனக்கு உதயநிதியை  12 வருடங்களாக தெரியும். அவருடன் பழகுவதற்கு எப்போதும் பயமாக இருந்ததில்லை. அவரை மிக எளிமையாக அணுகலாம். அவர் நிறைய உதவிகளை செய்பவர். மிக நல்ல மனிதர். அருண்ராஜா பெரிய இழப்பிற்கு பிறகு இப்படி ஒரு படம் எடுத்தது பெரிய விஷயம்.

இந்தியாவில் இன்னும் ஜாதி இருக்கிறது. இந்த நிலையில், இப்படி ஒரு படம் அவசியமானதாக இருக்கிறது. இப்படத்திற்காக உழைத்த ஒட்டு மொத்த படக் குழுவிற்கும் எனது வாழ்த்துக்கள். படத்தை நீங்கள் தியேட்டரில் பார்த்து ஆதரவு தர வேண்டும்…” என்றார்.

நடிகர் சிவகார்த்திகேயன் பேசும்போது, “உதயநிதி சார் பல வேலைகளை பார்க்கிறார். அது அவரது குடும்ப இரத்ததிலேயே இருக்கிறது. உண்மையான ‘டான்’ உதயநிதி சார்தான்.

இத்தனை வருட பழக்கத்தில் அவர் எனக்கு பாசிடிவிட்டியை மட்டுமே தந்துள்ளார். ‘நெஞ்சுக்கு நீதி’ பவர்புல் டைட்டில். எனக்கு ரீமேக் படங்களைத் தயாரிக்க பயம். ஆனால் அருண்ராஜா இப்படத்தை சிறப்பாக உருவாக்கியுள்ளார். அருண்ராஜா எனது நண்பன் என்பதில் எனக்குப் பெருமைதான். ‘கனா’ போன்ற படத்தை எடுத்து பெரிய வெற்றியை கொடுத்துள்ளார். அருண் பெரிய இழப்பில் இருந்தபோது அவனுக்கு உறுதுணையாக இருந்தது உதயநிதி சார்தான்.

பாடலாசிரியர் யுகபாரதி, வசனகர்த்தா தமிழ், ஒளிப்பதிவாளர் தினேஷ், இசையமைப்பாளர் திபு மற்றும் நடிகர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். போனி கபூர் சாருக்கும் நன்றி. இந்த நெஞ்சுக்கு நீதி பெரிய வெற்றியடையும்…” என்றார்.

நடிகர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, “முதல் நன்றி என் தாத்தா கலைஞருக்கு. அவர் தந்ததுதான் இந்த டைட்டில்.  இந்தப் படத்தில் டைட்டிலுக்கு நியாயம் செய்ய முயற்சித்து இருக்கிறோம்.

போனிகபூர் என்னை அழைத்து இந்தப் படத்தை ரீமேக் பண்ணலாம் என்று கூறியபோது., இப்படத்திற்கு யாரை இயக்குநராக வைத்து பண்ணலாம் என்று வலைவீசி தேடினோம். யாரும் முன் வரவில்லை. கனா’ படத்தை பார்த்துவிட்டு, அருணை கூப்பிட்டு பேசியபோது, அவர் மட்டும் இதை உடனேயே ஒத்துக் கொண்டார்.

நான் நெஞ்சுக்கு நீதி’ டைட்டில் உரிமை பற்றி, அப்பாவிடம் கேட்டபோது, “பார்த்து பண்ணுங்க…” என கூறினார். படம் எடுக்கும்போது, கொரோனா பெரிய தடையாக இருந்தது. அருண் மனைவி மற்றும் இந்தப் படத்தில் பணியாற்றி கொரோனாவில் உயிரிழந்தவர்களுக்கு இந்தப் படத்தின் வெற்றி சமர்ப்பணமாகட்டும். அருண் தமிழ் சினிமாவில் பெரிய இடத்திற்கு செல்வார்.

மற்றும் படத்தில் பங்கு கொண்ட நடன இயக்குநர், கலை இயக்குநர், ஒளிப்பதிவாளர் தினேஷ் அவர்களுக்கும் எனது நன்றி.

இந்தப் படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டபோது முதலில் போலீஸாக ெப்படி நடிக்க போகிறோம் என்ற பயம் எனக்குள் இருந்தது. நான் போலீஸாக திரையில் சிறப்பாக வந்ததற்கு பெரிய காரணம் ஒளிப்பதிவாளர் தினேஷ்தான். ஷிவானி ராஜசேகர், குறிஞ்சி கதாபாத்திரமாக வாழ்ந்திருக்கிறார். பாடல் வரிகள் பவர்புல்லாக இருக்கும்.

இந்தப் படத்திற்கு ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் பெரிய பலமாக இருந்தார். எல்லோருக்கும் நன்றி. இந்தப் படம் சமூக நீதி பேசும் படம். இந்தச் சமயத்தில் நம் தமிழகத்திற்குத் தேவையான படம் இது. உங்களுக்கும் நிச்சயம் பிடிக்கும்..” என்றார்.

- Advertisement -

Read more

Local News