Friday, April 12, 2024

அனுஷ்காவிடமிருந்து சமந்தா தட்டிப் பறிக்கும் படங்கள்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகை அனுஷ்கா ஷெட்டிக்கு வயது 40 என்றாலும் அவர் மீதான கிரேஸ் இன்னமும் தென்னிந்திய மொழி ரசிகர்களிடத்தில் குறையவே இல்லை. கடைசியாக ‘நிசப்தம்’ படத்தில் அனுஷ்கா நடித்திருந்தாலும் அதிகமான படங்களை அவர் ஒப்புக் கொள்ளாமலேயே இருக்கிறார்.

இந்த நிலையில் அனுஷ்கா நடிக்கவிருந்த இரண்டு முக்கியமான கதாப்பாத்திரங்கள் தற்போது சமந்தாவுக்குக் கிடைத்திருப்பதாக டோலிவுட் செய்திகள் தெரிவிக்கின்றன.

அனுஷ்கா நடித்த ‘ருத்ரமாதேவி’ படத்தை இயக்கியவர் தெலுங்கின் பிரபலமான இயக்குநரான குணசேகர்.  இவர் அடுத்து ‘மகாகவி’ காளிதாஸர் இயற்றிய ‘சாகுந்தலம்’ நூலை மையமாக வைத்து ‘சாகுந்தலம்’ என்ற பெயரிலேயே ஒரு வரலாற்றுப் படத்தை உருவாக்கவிருக்கிறார்.

இந்தப் படத்தில் மையக் கதாபாத்திரமான ‘சகுந்தலை’ கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் பூஜா ஹெக்டேவை அணுகியிருக்கிறார் குணசேகர். ஆனால் பூஜா இதில் ஆர்வம் காட்டாமல்விட அடுத்து அனுஷ்காவை அணுகினார். அனுஷ்காவும் இதில் நடிக்க ஆர்வம் கொண்டார்.

முதல் கட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு அவரது கேரக்டர் ஸ்கெட்ச் அவரிடத்தில் சொல்லப்பட்டது. அதில் படம் முழுவதும் புராண காலத்திற்கேற்றவாறு ஜாக்கெட் இல்லாமல் இருக்க வேண்டும் என்பது அனுஷ்காவை தூக்கிவாரிப் போட்டுள்ளது. இந்த ஒரு விஷயத்தை அனுஷ்கா மறுத்துள்ளார். “இதை மட்டும் மாற்ற முடியுமா..?” என்று கேட்டுள்ளார் அனுஷ்கா.

ஆனால் இயக்குநர் குணசேகர் அதற்கு ஒத்துக் கொள்ளாததால் இந்தப் பிராஜெக்ட்டில் இருந்து தான் விலகிக் கொள்வதாக அனுஷ்கா சொல்லிவிட்டாராம். இதனால் இந்தக் கதாபாத்திரம் தற்போது சமந்தாவிடம் வந்து நின்றுள்ளது. சமந்தா மறுப்பேதும் சொல்லாமல் இதை ஏற்றுக் கொண்டதாகத் தெரிகிறது.

இதேபோல் இயக்குநர் கிருஷ்ண வம்சி பிரபல தயாரிப்பாளர் கிருஷ்ண வம்சி தயாரிப்பில் ஒரு படத்தை இயக்கவுள்ளார். இந்தப் படத்தில் நடிக்கவும் அனுஷ்காவை அணுகியிருக்கிறார்கள். அனுஷ்கா ஏதோ ஒரு காரணத்தினால் கடைசி நேரத்தில் மறுக்க.. இதுவும் சமந்தாவின் கைக்கே போயிருக்கிறதாம்.

ஆக, இனிமேல் அனுஷ்காவால் சமந்தாவுக்கு மட்டுமே படங்கள் கிடைக்கும்போல தெரிகிறது..!

- Advertisement -

Read more

Local News