Friday, April 12, 2024

‘அருள்நிதி-15’ படத்தின் அனைத்து உரிமைகளையும் வாங்கியது சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங் அவர்களின் MNM Films நிறுவன தயாரிப்பில், YouTube ல்  ‘எரும சாணி’  தொடர் மூலம் புகழ் பெற்ற விஜய்குமார் ராஜேந்திரன் இயக்கத்தில் ஒரு புதிய படம் தயாராகியுள்ளது.

இந்தப் படத்தில் நடிகர் அருள்நிதி தமிழரசு நாயகனாக நடித்திருக்கிறார். படத்திற்கு இன்னமும் பெயர் வைக்காததால், தற்போதைக்கு அருள்நிதி-15’ என தலைப்பு வைத்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தின் அனைத்து உரிமைகளையும் தமிழ் திரைத்துறையில் ரிலீஸ் மற்றும் மார்க்கெட்டிங் மூலம் பல அற்புதமான வெற்றி திரைப்படங்களை தந்துள்ள B.சக்திவேலன் அவர்களின் Sakthi Film Factory நிறுவனம் வாங்கியுள்ளது.

இது குறித்து Sakthi Film Factory நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் B.சக்திவேலன் பேசும்போது, “நடிகர் அருள்நிதி மிக வித்தியாசமான களங்களில், ரசிகர்கள் ரசிக்கும்படியான படங்களையும், குடும்பத்தினர் கொண்டாடும் படங்களையும், தொடர்ச்சியாக தந்து வருகிறார்.

அவரது சமீபத்திய படமான களத்தில் சந்திப்போம்’ திரைப்படத்தின் வெற்றி திரைத்துறையில் அவரது மதிப்பை உயர்த்தியிருக்கிறது. ஒரு நண்பரின் மூலமாக அவரது இந்த திரைப்படத்தின் இறுதி பதிப்பை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

படம் முடியும்வரையிலும் படம் எவ்வாறு செல்லும் என்பதை கணிக்கமுடியாதபடி, பல ஆச்சர்யஙகளை தந்தது இந்த திரைப்படம். அனைத்து வகையான ரசிகர்களும் கொண்டாடும் அம்சங்கள் படத்தில் நிரம்பியிருந்தது.

படம் முடிந்த கணத்திலேயே படத்தின் அனைத்து உரிமைகளையும் பெற்றுவிட வேண்டும் என்கிற வேட்கை என்னுள் உண்டானது. படத்தின் கதையில் அருள்நிதியின் நடிப்பு மிக அபாரமானதாக இருந்தது. இப்படத்தின் வெளியீட்டுக்கு பிறகு அவர் முன்னணி நட்சத்திரங்களுல் ஒருவராக உயர்வார்.

பல படங்களில் பெருமையுடன் வழங்குகிறோம் என்பதை வாய் வார்த்தையாக உபயோகிப்பார்கள். ஆனால்  இத்திரைப்படம் Sakthi Film Factory நிறுவனத்திற்கு மிக உணர்ச்சிகரமான தருணம் ஆகும்.

உண்மையிலேயே இப்படத்தை மிக பெருமையுடன் வழங்கவுள்ளோம். இப்படத்தை கண்டிப்பாக தியேட்டரில் ரசிகர்கள் கொண்டாடுவார்கள். ஜூலை 21 அன்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை பெருமையுடன் வெளியிடவுள்ளோம்…” என்றார்.

- Advertisement -

Read more

Local News