Friday, April 12, 2024

‘துக்ளக் தர்பார்’ படப் பிரச்சினை – சீமானிடம், பார்த்திபன் சமாதானப் பேச்சு..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

துக்ளக் தர்பார்’ படத்தில் ‘நாம் தமிழர்’ கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமானை கிண்டல் செய்து சில வசனங்களும், காட்சிகளும் அமைந்திருப்பதாக புகார் எழுந்தது.

இது குறித்து நாம் தமிழர் கட்சியின் பிரமுகர்கள் ‘துக்ளக் தர்பார்’ படக் குழுவுக்கு தங்களது கண்டனங்களைத் தெரிவித்திருந்தனர்.

அந்தக் குறிப்பிட்ட காட்சிகளை நீக்காவிட்டால் ‘துக்ளக் தர்பார்’ திரைப்படம் தமிழ்நாட்டில் ஒரு ஷோ கூட முழுமையாக ஓடாது” என்று எச்சரித்திருந்தார்கள்.

இந்த நிலையில் இந்தப் படத்தில் சீமானைப் போன்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகர் பார்த்திபன், தனது டிவீட்டர் செய்தியில் சீமானிடம் தான் இது குறித்து சமாதானம் பேசியதாகக் குறிப்பி்ட்டிருக்கிறார்.

சர்ச்சைக்குரிய பார்த்திபனின் கேரக்டர் பெயரான ‘ராசிமான்’ என்ற பெயரை மாற்ற முயற்சி செய்து வருவதாக பார்த்திபன் கூறியிருக்கிறார்.

பெயர் மாற்றுதல் நடைபெறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

- Advertisement -

Read more

Local News