கற்றது தமிழ்’ ராம் இயக்கி உள்ள ‛பறந்து போ’ பட பாடல் வெளியீட்டு விழாவில் பட்டிமன்ற பேச்சாளர் ராஜா பேசுகையில் அப்பா மகன் உறவை இந்த படம் பேசுகிறது. பல காட்சிகளில் அப்பாவாக நடித்த சிவாவும் அவர் மகனும் கலக்கி இருக்கிறார்கள். குழந்தைகளுடன் நேரத்தை செலவழிக்க வேண்டும் என்ற கருத்தை படக்கரு சொல்கிறது. என் அப்பா உயிரோடு இல்லை. அவர் என்னை கலெக்டர் ஆக்கி பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டார். ஆனால் அந்த காலத்தில் மதுரையில் அப்படிப்பட்ட வசதி இல்லை.என்னால் கலெக்டர் ஆக முடியவில்லை. ஆனால் பேச்சாளர் ஆகிவிட்டேன். அதை கூட அவரால் பார்க்க முடியவில்லை. என் அப்பாவை படம் நினைவுபடுத்தியது. நம் குடும்பத்துடன், குழந்தைகளுடன் நேரத்தை செலவழிக்க வேண்டும். வெளிநாடு செல்ல வேண்டாம். உள்ளூரில் இருக்கும் நல்ல இடங்களுக்கு செல்லலாம் என்ற படக் கரு பாராட்ட பட வேண்டியது என்றார்.
