Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

மூன்று பாகங்களாக உருவாகிறதா சூர்யா நடிக்கும் வாடிவாசல் திரைப்படம்? வெளியான புது அப்டேட்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் சூர்யா அடுத்ததாக கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சூர்யா 44’ படத்தில் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகும் ‘சூர்யா 45’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதற்கு பிறகு, இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் ‘வாடிவாசல்’ படத்தில் நடிக்கவுள்ளார்.

ஜல்லிக்கட்டை மையமாகக் கொண்டு உருவாகும் ‘வாடிவாசல்’ படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்திற்கான தயாரிப்புத் துறையின் ஒரு பகுதியாக, மாடுபிடி வீரர்களுடன் சூர்யா பயிற்சி மேற்கொண்ட வீடியோ சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இயக்குநர் வெற்றிமாறன் சமீபத்தில் இயக்கிய ‘விடுதலை 2’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து, ‘வாடிவாசல்’ படத்தின் ப்ரீ-ப்ரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும், ‘வாடிவாசல்’ மூன்று பாகங்களாக உருவாகும் என தகவல் வெளியாகியுள்ளது. கதை மற்றும் திரைக்கதை வெற்றிமாறனால் எழுதப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News