னத் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘டிமான்ட்டி காலனி’. 2015-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. மு.க.தமிழரசு தயாரிப்பில் உருவான இந்தப் படத்தினை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டது.
7 ஆண்டுகளுக்கு பிறகு இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. முதல் பாகத்தை இயக்கிய அஜய் ஞானமுத்துவே இரண்டாம் பாகத்தையும் இயக்கியுள்ளார். அருள்நிதி நாயகனாக,பிரியா பவானி சங்கர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சாம்.சிஎஸ் இசையமைத்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கியது. இந்த நிலையில், படத்தின் ட்ரெய்லர் படக்குழு வெளியிட்டுள்ளது.
படத்தில் நாம் எதிர்பார்க்கும் திகில் காட்சிகள் ட்ரெய்லர் முழுவதும் நிரம்பியிருக்கின்றன. காட்சிகளை விட சாம்.சி.எஸ்ஸின் பின்னணி இசை அச்சத்தை கொடுக்கிறது. அதற்கு கேமரா கோணங்கள் உதவிபுரிகின்றன. பறப்பது, திகைப்பது, பயந்து நடுங்குவது, பேயை விரட்ட வரும் புத்த பிட்சுக்களுடன் வழக்கமான ஹாரர் காட்சிகள். கதை களத்துக்கான செட், விஎஃபெக்ஸ், லொகேஷன்ஸ் உள்ளிட்ட மேக்கிங் சார்ந்த அம்சங்கள் கவனம் மிரட்டுகிறது.