Wednesday, April 10, 2024

“பசியாற்றிய வள்ளல் விஜயகாந்த்” – ஏ.ஆர்.ரஹ்மான் புகழஞ்சலி

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகரும், தேமுதிக நிறுவனத் தலைவருமான விஜயகாந்த் மறைவுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் பிரகாஷ்ராஜ் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக ரஹ்மான் தனது எக்ஸ் தள பக்கத்தில், “திரைத்துறையில், கதாநாயகனாக தான் உண்ணும் அதே தரமான உணவே எல்லோருக்கும் வழங்கப்பட வேண்டும் என்று போராடி வென்றார். பசியாற்றிய வள்ளல் என்று இன்று எல்லோரும் அவரைப் புகழ்வது நெகிழ்ச்சியாக இருக்கிறது.#RIPCaptainVijayakanth” என பதிவிட்டுள்ளார்.

அதேபோல பிரகாஷ்ராஜ் தனது எக்ஸ் பதிவில், “மிஸ் யூ கேப்டன். அற்புதமான மனிதருடன் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. தைரியமான மற்றும் அக்கறையுள்ள மனிதர். மிஸ் யூ” என இரங்கல் தெரிவித்துள்ளார்.

 

- Advertisement -

Read more

Local News