Wednesday, April 10, 2024

அன்னபூரணி – விமர்சனம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

 

நீலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் அன்னபூரணி. நமது வீடுகளில் பெரும்பாலும் பெண்கள் தான் சமையல் செய்கின்றனர்.  ஆனால் பெரிய ஸ்டார் ஹோட்டல்களில் குறைவான எண்ணிக்கையில் தான் பெண் சமையல் கலைஞர் உள்ளனர். இதை மைக்கருவாக கொண்டு பல கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதமாக  அன்னபூரணி  படத்தின் திரைக்கதையை அமைதிருக்கிறார் இயக்குனர் நீலேஷ் கிருஷ்ணா.

ஸ்ரீ ரங்க கோவிலில் மடப்பள்ளியில் பிரசாதம் செய்யும் ரங்கராஜன் மகள்  அன்னபூரணிக்கு கேட்டரிங் படித்து ஸ்டார் ஹோட்டலில் வேலை செய்ய வேண்டும் என்று ஆசை. சைவ உணவு பழக்கம் கொண்ட நம் குடும்பத்துக்கு இது சரிவராது என்று சொல்ல அப்பாவை எதிர்த்து வீட்டை விட்டு வெளியேறுக்கிறார் அன்னபூரணி. அவர் நினைத்த படி சமையல் கலைஞர் ஆனாரா? அப்பா சமாதன அடைந்தாரா? என்பது மீதி கதை.

படத்தின் முதல் சில  காட்சிகளிலேயே ஸ்ரீரங்க கோபுரங்கள், வீதிகள், அக்ரஹாரம், பாசுரங்கள் என பல விஷயங்களை அழகான காட்சியுடன் சொல்லி நம்மை ஒரு வைஷ்ணவ பகுதிககே அழைத்து சென்று விடுகிறார் டைரக்டர்.

ஆண்களை போலவே பெண்கள் பல துறைகளில் சாதித்தாலும்,கலாச்சாரம், குடும்பம் இப்படி பல காரணங்களை கூறி பெண்ணின் சாதனைக்கு முட்டுகட்டை போடுகிறோம் என்று உண்மையை  சொல்கிறது அன்னபூர்ணி.

ஒரு பெண் பணி செய்யும் இடத்தில் தன்னை நிரூபிக்க  ஆண்களை விட அதிகம் உழைக்க வேண்டி உள்ளது என்பதை வசனமாக இல்லாமல் காட்சியாக வைத்துள்ளார் இயக்குனர். நடிப்பில் அப்பாவாக அச்சுத் குமார்தான் வாழ்ந்திருக்கிறார். ஒரு  வைஷ்ணவராகவும், மகள் மீது இருக்கும் பாசத்திற்கும், சமூக கேள்விகளுக்கும் நடுவில் தவிக்கும் மனிதராக சிறப்பாக நடித்திருக்கிறார். ஐம்பது ஆண்டுகள் தன் மீது சமூகம் திணித்து வைத்திருக்கும் அழுத்ததை கேள்வி கேட்கும் போது சச்சு நடிப்பின் முதிர்ச்சி தெரிகிறது.

அப்பாவுக்கு அடங்கி நடப்பதும், வேலையில் கம்பீரமாக நடந்து கொள்வதும் என  வித்தியாசம் காட்டி நடித்திருக்கிறார் நயன்தாரா. சத்யராஜ் நடிப்பில் அசத்தியிருக்கிறார். ஜெய் நயன்தாராவை மோட்டிவேட் செய்யும் வேலையை மட்டுமே செய்கிறார்.

இந்த படத்தை பார்க்கும் போது பல்வேறு ரெஸிபிகள் பெயரை நம்மால்  தெரிந்து கொள்ள முடிகிறது. தமனின் பின்னணி  இசையும், சத்யன் சூரியன் ஒளிப்பதிவும்  காட்சிகளுக்கு உயிர்கொடுத்துள்ளது. ஸ்ரீரங்கத்து அக்கார அடிசிலில் தொடங்கும் கதை பாய் வீட்டு பிரியாணியில் முடிகிறது. இந்த உணவு பயணத்தின் வழியே பெண் விடுதலை, சமூகம், ஜாதி, இப்படி பல விஷயங்களை  அன்னபூரணியில் பரிமாறப்பட்டுள்ளன. நம்மில் இருக்கும் பல கேள்விகளுக்கு பதிலாக அன்னபூரணி -நம்மில் ஒருத்தியாகவே வந்து செல்கிறாள்.

- Advertisement -

Read more

Local News