Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

இன்னும் முடிவடையாத புஷ்பா 2 படத்தின் ஒரு பாடல்… மீண்டும் ஸ்ரீ லிலாவை அணுகிய படக்குழு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

2021ஆம் ஆண்டில், இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் ஆகியோர் நடித்த ‘புஷ்பா’ திரைப்படம் வெளியானது. இப்படம் பெரும் வெற்றியை பெற்றதை அடுத்து இதே கூட்டணியுடன் இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. புதிய பாகம் வருகின்ற டிசம்பர் 5ம் தேதி திரைக்கு வரவுள்ளது.

புஷ்பா முதல் பாகத்தில், ‘ஊ சொல்றியா’ என்ற பாடலுக்கு சமந்தா நடனம் ஆடியது உலகளவில் வைரலானது. அதுபோல், புஷ்பா இரண்டாம் பாகத்திலும் ஒரு சிறப்பான பாடல் உள்ளது. இதற்கான நடனத்துக்காக முதலில் ஸ்ரீ லீலாவை அணுகினர். அதன் பின்னர் சில காரணங்களால் பாலிவுட் நடிகைகள் த்ரிப்தி டிம்ரி, ஷ்ரத்தா கபூர் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், அவர்கள் அதிக சம்பளம் கேட்டதால், படக்குழு அவர்களிடமிருந்து இந்த முயற்சியை நிறுத்தியுள்ளது.

இப்போது மீண்டும் ஸ்ரீலீலாவை அணுகி, இந்த பாடலுக்கு நடனம் ஆட பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த பாடல் காட்சிக்கான படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது. இப்பாடல் காட்சி ஒன்றும் மட்டுமே மீதம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News