சவுரவ் கங்குலியின் பயோபிக்கில் கங்குலியாக நடிக்க பதட்டமாக உள்ளதாக நடிகர் ராஜ்குமார் ராவ் கூறி இருக்கிறார். மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாற்று படம் குறித்த அப்டேட் வெளியாகி இருக்கிறது. சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் ராஜ்குமார் ராவ் பேசுகையில், கிரிக்கெட் ஜாம்பவான் சவுரவ் கங்குலியாக நடிப்பதை உறுதிப்படுத்தினார். அவர் கூறுகையில், ஆம், நான் சவுரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கிறேன். இது ஒரு பெரிய பொறுப்பு, அதனால் எனக்கு மிகவும் பதட்டமாக இருக்கிறது என்றார்.
