நடிகர் ரஜினிகாந்தை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று சந்தித்தார். இந்த சந்திப்பு சென்னையின் போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்தின் இல்லத்தில் நடந்தது.

சீமான் தனது பிறந்த நாளில் நடிகர் ரஜினிகாந்தை சந்திக்க நேரம் கேட்டிருந்தார். ஆனால், அன்றைய தினம் படப்பிடிப்பின் காரணமாக அவர் ரஜினிகாந்தை சந்திக்க முடியவில்லை. அதன் பிறகு, இன்று நடிகர் ரஜினிகாந்தை சீமான் சந்தித்தார்.
இந்த திடீர் சந்திப்பு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே, இந்த சந்திப்பின்போது அரசியல் தொடர்பான எந்த விவாதமும் நடைபெறவில்லை என்றும், இது ஒரு சாதாரண சந்திப்பு என்ற தகவல் வெளியாகியுள்ளது.