Saturday, September 14, 2024

அரவிந்த்சாமி தொடர்ந்த வழக்கு… பரபரப்பு தீர்ப்பு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குனர் சித்திக் இயக்கத்தில் அரவிந்த்சாமி மற்றும் அமலாபால் நடித்த 2018ம் ஆண்டு வெளியான படம் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’. இந்தப் படத்தில் அரவிந்த்சாமி நடித்ததற்காக அவருக்குத் தர வேண்டிய சம்பளம் மற்றும் அவரிடமிருந்து கடனாகப் பெற்ற 35 லட்ச ரூபாய் ஆகியவற்றைத் தராததற்காக, அப்படத்தின் தயாரிப்பாளர் கே முருகன் குமாரைக் கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

அரவிந்த்சாமியின் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், 2017 ஏப்ரல் 7 அன்று இப்படத்தில் நடிப்பதற்காக தயாரிப்பாளருடன் 3 கோடி ரூபாய் சம்பள ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும், அந்த சம்பளம் படத்தின் உருவாக்கத்தின் போது வழங்கப்படவேண்டும் என்றும், அதோடு வருமான வரித் துறைக்கு செலுத்த வேண்டிய TDS தொகையை தயாரிப்பாளர் நேரடியாக செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்தப் படம் 2018 மே 17 அன்று வெளியானது. ஆனால், தயாரிப்பாளர் 30 லட்ச ரூபாய் தொகையை ஏற்கனவே வழங்கியிருந்தும், முழு சம்பளத்தையும் கொடுக்காமல் வைத்திருந்தார்.

மேலும், வருமான வரித் துறைக்கு செலுத்த வேண்டிய 27 லட்ச ரூபாய் TDS தொகையும் செலுத்தவில்லை. இதற்கு மேலாக, படத்தை வெளியிட அரவிந்த்சாமியிடம் 35 லட்ச ரூபாய் கடனும் பெற்றார், அதை திருப்பித் தரவில்லை.இதனால், வட்டியுடன் அனைத்துத் தொகையையும் திருப்பித் தர வேண்டும் என 2018ல் தயாரிப்பாளர் மீது வழக்கு தொடரப்பட்டது. 2019ல் இந்த வழக்கில் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அளித்த தீர்ப்பில், தயாரிப்பாளர் முருகன் 65 லட்ச ரூபாயை 18 சதவீத வட்டியுடன் திருப்பித் தர வேண்டும் மற்றும் 27 லட்ச ரூபாயை வருமான வரித் துறைக்கு செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இந்தத் தீர்ப்பை நிறைவேற்ற அரவிந்த்சாமியின் தரப்பில் மீண்டும் மனு செய்யப்பட்டது. தயாரிப்பாளர் தரப்பில் வாதிட்ட வக்கீல், தனது மனுதாரர் சொத்து விவரங்களை தாக்கல் செய்துள்ளார் என்றும், அவரிடம் சொத்து எதுவுமில்லை என்றும் வாதிட்டார். இதனையடுத்து, நீதிபதி வழக்கை ஜூலை 8க்கு தள்ளி வைத்தார்.

- Advertisement -

Read more

Local News