Touring Talkies
100% Cinema

Tuesday, March 11, 2025

Touring Talkies

‘நிலவுக்கு மேல் என்னடி கோபம் படத்தின் முதல் பாடலை தனுஷின் மகன் யாத்ரா எழுதினாரா? #NEEK

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் தனுஷ் சமீபத்தில் “ராயன்” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்திருந்தார். இந்த படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்திற்கு தொடர்ந்து, “நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்” என்ற திரைப்படத்தை இயக்கவுள்ளார். இது ராம் காம் வகை படமாக உருவாகும் என்று கூறப்படுகிறது. இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

அந்த பாடலுக்கு “கோல்டன் ஸ்பேரோ” என்ற தலைப்பை வைத்துள்ளனர். மேலும், இந்த பாடலில் நடிகை பிரியங்கா மோகன் கேமியோ பாத்திரத்தில் நடித்து இருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. தனுஷின் மூத்த மகன் யாத்ரா தனுஷ், இந்த பாடலுக்கு பாடல் வரிகளை எழுதியுள்ளார் என்று எஸ்.ஜே. சூர்யா தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனால் யாத்ரா தனுஷ் பாடலாசிரியர் ஆனார் என செய்திகள் சமூக ஊடகங்களில் பரவின.

ஆனால், யாத்ரா இந்த பாடலில் நான்கு வரிகளில் மட்டுமே ஹூக் லைன்ஸ் எழுதியுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. மேலும், நேற்று வெளியான போஸ்டரில், “கோல்டன் ஸ்பேரோ” பாடலை சுபலட்சுமி, ஜி.வி. பிரகாஷ் குமார், தனுஷ் மற்றும் அறிவு இணைந்து பாடியுள்ளனர். பாடலின் வரிகளை அறிவு எழுதியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாடல் ஆகஸ்ட் 30 அன்று வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

- Advertisement -

Read more

Local News