Wednesday, April 17, 2024

நண்பர் விஜய் கட்டிய சாய்பாபா கோவிலுக்கு சென்ற ராகவா லாரன்ஸ்…அனைவரையும் அழைத்து அன்பான வேண்டுகோள்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் விஜய் கட்டியுள்ள கோவிலுக்கு அவரது தாயாருடன் சென்ற ராகவா லாரன்ஸ் அந்த கோவிலுக்குள் சென்று போது தெய்வீகமான அதிர்வுகளை உணர்ந்ததாகவும் எல்லோரும் அந்த கோவிலுக்கு சென்று சாய் பாபவை தரிசிக்கும்படி கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது,

அனைவருக்கும் வணக்கம்….

நண்பன் விஜய் கொரடூரில் புதியதாக கட்டியிருக்கின்ற சாய் பாபா கோவிலுக்கு அவரது தாயாருடன் இன்று சென்றேன்.

நான் ராகவேந்திரர் கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்யும்பொழுது அவர் கோவிலுக்கு வந்தார் அவர் வந்தது மட்டுமில்லாமல் பாடலையும் பாடி வாழ்த்தினார்.

இன்று நான் இந்த கோவிலுக்கு வந்திருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நண்பன் விஜய்க்கு எனது மனபூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

கோவிலுக்குள் சென்றவுடன் தூய தெய்வீகமான அதிர்வுகள் ஏற்பட்டதை உணர்ந்தேன். அனைவரும் இந்த கோவிலுக்கு சென்று சாய்பாபாவை தரிசிக்கிமாறு கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்
ராகவா லாரன்ஸ்.

என ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News