நடிகை காஜல் அகர்வால் பிரபலமான நடிகையாக வலம் வருகிறார். 2008 ஆம் ஆண்டு பரத்தின் பழனி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். ஆனால், இப்படம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை.பின்னர் தெலுங்கு சினிமாவில் கால்பதித்த காஜல், ராம் சரண்க்கு ஜோடியாக மகதீரா படத்தில் நடித்தார். இந்தப் படம் அவருக்குப் பெரும் புகழைக் கொடுத்தது.

மகதீரா வெற்றிக்குப் பிறகு முன்னணி நடிகையாக தன்னை நிலைநிறுத்திக் கொண்ட காஜல் அகர்வால், விஜய்க்கு ஜோடியாக துப்பாக்கி , ஜில்லா படத்தில் நடித்தார். அஜீத், சூர்யா, தனுஷ் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கென தனி இடத்தைப் பிடித்துள்ளார்.


நடிப்பில் பிஸியாக இருக்கும் காஜல் அகர்வால் அளித்த ஒரு பேட்டியில், பாலிவுட் சினிமாவுக்கும் தென்னிந்திய சினிமாவுக்கும் பெரிய வேறுபாடுகள் உள்ளன. இந்தியில் ஷர்மிர்ளா தாகூர், ஹேமா மாலினி ஆகியோர் திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து கதாநாயகிகளாக நடித்தனர். தற்போது திருமணமான தீபிகா படுகோனே, ஆலியா பட் இருவரும் ஹிந்தி சினிமாவில் நல்ல கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். ஆனால் திருமணமான நடிகைகளுக்கு தென்னிந்திய சினிமாவில் வாய்ப்பு கிடைப்பது பெரிய விஷயமாக இருக்கிறது.இது தான் மிகவும் கஷ்டத்தை கொடுக்கிறது.

இதில் நயன்தாரா மட்டும் தான் விதிவிலக்கு. அவர் மிகவும் கிரேட் திரைப்படங்கள் மற்றும் கதைகளைத் தேர்ந்தெடுப்பதில் எனக்குப் பிடித்த விஷயமாகும். தென்னிந்திய சினிமாவில் திருமணமான நடிகைகள் ஓரம்கட்டபடுகிறார்கள். இந்த நிலையை விரைவில் மாற்றுவோம். திருமணமாகி குழந்தைகள் பிறந்தாலும் இந்த தலைமுறை நடிகைகள் தொடர்ந்து நடித்து வருகின்றனர். ரசிகர்களின் பார்வையும் மாறி உள்ளது. ஒரு படத்திற்கு நல்ல கதை இருக்கும் போது யார் நடித்தாலும் அனைவரும் அப்படத்தை பார்த்து ரசிப்பார்கள் என்று கூறியுள்ளார்.