Wednesday, November 20, 2024

டைகர்-3’ வில்லன் கதாப்பத்திரம் குறித்து – இம்ரான் ஹாஷ்மி

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

யஷ் ராஜ் ஃபிலிம்ஸின் மிகப் பிரம்மாண்டமான தயாரிப்பான டைகர்-3 இல் இம்ரான் ஹாஷ்மி சல்மானுக்கு வில்லனாக நடித்து பாராட்டை பெற்றுவருகிறார். இதைத் தொடர்ந்து தனது கதாப்பாத்திரம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அசுரத்தனமான  வில்லன் பாத்திரம் திருப்புமுனை ஏற்படுத்தும் நடிப்பின் மூலம் ஒவ்வொரு காட்சியிலும் அதிரடி சூப்பர் ஸ்டார் சல்மான் கானுடன் நேருக்கு நேர் மோதும் போதும் அனைவரையும் கவர்ந்திருக்கிறேன்.

 

டைகர்-3 இதுவரை  4 நாட்களில் உலகளவில் 169.75 கோடி வசூலையும் 272 கோடி மொத்த வசூலையும் பெற்றுள்ளது. மேலும் இந்த வார விடுமுறை இறுதியில் பெரிய வசூலை எதிர்ப்பார்க்கலாம் என கூறப்படுகிறது.

டைகர்-3-ன் படத்திற்கு கிடைத்த வரவேற்பையும், எனது நடிப்பின் மீது மக்கள் எந்த அளவிற்கு அன்பைப் பொழிந்திருக்கிறார்கள் என்பதையும் கண்டு நான் சிலிர்த்துப் போயிருக்கிறேன். நாங்கள் ஒரு நல்ல நோக்கத்தோடு படத்தை தொடங்கினோம், மேலும் படம் உலகளவில் ரசிகர்களை மகிழ்விக்கும் என்று எதிர்பார்த்தேன்.  ஆன்டி-ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பை நான் மிகவும் ரசித்தேன், சல்மான் கானுடன் நேருக்கு நேர் மோதுவதை விட வேறேது சிறந்ததாக இருக்கும்!  எங்கள் மோதலை மக்கள் ரசித்து மகிழ்ந்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், மேலும் அது எனக்கு சிறந்த மதிப்பீடாக கருதுகிறேன்.

எனது வில்லத்தனமான கதாபாத்திரத்திரத்தை ரசிகர்கள் விரும்பினார்கள். டைகர்-3 பாக்ஸ் ஆபிஸில் வெற்றிப் படமாக மாற்றிய  மக்களுக்கு நன்றி எனக் கூறினார்.

ஆதித்யா சோப்ரா தயாரிப்பில் மணீஷ் ஷர்மா இயக்கத்தில் உருவான டைகர்-3 இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் ஓடிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News