Wednesday, April 10, 2024

சூர்யாவுடன் இணையும் கார்த்திக் சுப்புராஜ்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பீட்சா, ஜிகிர்தண்டா, பேட்ட, ஜெகமே தந்திரம், மகான், ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ் போன்ற படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் அடுத்து சூர்யா நடிப்பில் ஒரு படத்தை இயக்க இருக்கிறார்.

சூர்யாவின் 44வது படமாக உருவாக இருக்கும் அந்தப் படத்தின் கதை கேங்க்ஸ்டர் மற்றும் காதல் பின்னணியில் அமைக்கப்பட்டிருக்கிறதாம். இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது.

கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் இந்தப் படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது.

இந்த நிலையில் கார்த்திக் சுப்புராஜுடன் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள சூர்யா இது ஒரு புதிய தொடக்கம் என்று குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

Read more

Local News