சுப்பிரமணியபுரம், நாடோடிகள் படத்திற்குப் பிறகு நடிப்பில் பிசியான சசிகுமார் இப்போது ஒரு படத்தை இயக்கும் வேலையில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.
பதினான்கு ஆண்டுகளுக்குப் பின் இயக்குனர் பொறுப்பை கையில் எடுத்துள்ளதால் அதில் பிரபலமான நடிகர்களை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளாராம். இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளது
அந்தப் படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. குடும்ப பின்னணி கொண்ட கதையாக உருவாக உள்ள இந்தப் படத்தின் ஆரம்பகட்டப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
விரைவில் படப்பிடிப்பு குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்றும் அப்போது படத்தில் இடம்பெறும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரம் முழுமையாக அறிவிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.