நடிகர் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களை கவரும் வகையில் தொடர்ந்து வெளியாகி வருகிறார்.கடந்த ஜனவரியில் அவரது “துணிவு” படம் வெளியான நிலையில், அடுத்த படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தினர்.

இந்நிலையில் அவரது அடுத்த படமான விடாமுயற்சி படத்திற்கான அறிவிப்பு கடந்த மே மாதத்திலேயே வெளியான நிலையில், “விடாமுயற்சி” படத்தின் ஷூட்டிங் தொடர்ந்து தள்ளிப் போவது ரசிகர்களுக்கு பெரிதும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

விடாமுயற்சி அல்லது குட் பேட் அக்லி இந்த இரு படங்களில் எது முதலில் வெளியாகும் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இதனிடையே, ஹைதராபாத்தில் குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்ற நடிகர் அஜித், அங்கு ரசிகர்களுடன் அடிக்கடி புகைப்படங்களை எடுத்துக் கொண்டு வருகிறார். இப்புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து, ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
