Saturday, April 13, 2024

‘ஓ போடு’ சியான் விக்ரம் கொடுத்த ஜெமினி 2 அப்டேட்?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஒரு படத்தை விருது வாங்க வைக்கும்‌ அளவுக்கு ஒருவரால் நடிக்க முடியும் என்றால் நிச்சயம்‌ அதில் விக்ரம் இருப்பார். மக்களால் அன்போடு சீயான் எனப்படும் விக்ரம் சினிமாவிற்காக தனது முழு மூச்சையும் கொடுத்து உடலை வருத்தி நடிக்க கூடியவர்.இவருக்கு இவர் நடிப்பால் சேர்ந்த கூட்டமே ஏராளம்.

நடிகர் விக்ரமின் திரை பயணத்தில் மறக்க முடியாத படங்கள் பல உண்டு.அவற்றுள் சேது, தில், தூள், ஜெமினி, காசி போன்ற பல படங்களில் அவர் நடிப்பின் நாயகன் என்பதை காட்டியிருப்பார்.அவரது நடிப்பு ஒவ்வொரு படத்தில் தனித்துவமாக இருக்கும் பல பாராட்டுகளையும் பெறும் என்பதில் ஆச்சரியமில்லை.

இப்படிப்பட்ட படங்களில் ஒன்று தான் இயக்குனர் சரண் இயக்கத்தில் அவர் நடித்த ஜெமினி திரைப்படம். இப்படம் இன்றுவரை மக்கள் விரும்பும் படங்களின் பட்டியலில் நிச்சயம் இடம்பிடித்து இருக்கும். இருந்தாலும் சமீப காலமாக விக்ரம் நடித்த படங்கள் எவையும் எதிர்பார்த்த அளவிற்கு அவருக்கு கைக்கொடுவில்லை. இந்நிலையில் பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்துள்ளார் விக்ரம் இப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையில் வெளியாக உள்ளது.

அதேசமயம் நேற்றைய தினம் விக்ரம் தனது இன்ஸ்டா பக்கத்தில் ‘ மிக்க நன்றி.. என்று குறிப்பிட்டு for all the love pouring in today. Interesting updates..இன்னும் சில தினங்களில், Any guesses?? & don’t forget to ஓ போடு!! ‘ என்று பதிவிட்டிருந்தார்.சில தினங்களில் முக்கியமான அப்டேட்கள் வெளிவரும் என்று சொல்லியிருக்கிறார் விக்ரம்.

விக்ரம் நடித்த ஜெமினி படம் வெளியாகி 22 ஆண்டுகள் நிறைவு செய்த தினம் நேற்று, இவர் போட்ட ‘ஓ போடு’ பதிவினால், ரசிகர்கள் ஜெமினி படத்தின் பாகம் 2 அப்டேடாக இருக்குமா என கமெண்ட் செய்து வருகிறார்கள்.அப்படி இல்லையெனில் கர்ணன், கருடா போன்ற படங்களின் முக்கிய அறிவிப்பாக இருக்கலாம் என்றும் கூறுகிறார்கள்.எப்படி இருந்தாலும் இன்னும் சில தினங்களில் அவர் சொன்ன அப்டேட்கள் என்ன என்பது தெரிந்துவிடும்.

- Advertisement -

Read more

Local News