தேவர் பிலிம்ஸ் படங்களிலும், இராமநாராயணன் இயக்கிய படங்களிலும் நடிகர்களுடன் பாம்பு, குரங்கு, நாய், மாடு முதலான விலங்குகள் நடித்து பல படங்கள் வெளிவந்துள்ளன. அதன் பிறகு விலங்குகளை வைத்து ஒரு சில படங்களே வந்துள்ளன.
இப்போது இரண்டு நாய்கள் மட்டும் நடிக்கும் கிளவர் என்ற படம் உருவாகி உள்ளது. இந்தப் படத்தில் ஆரம்பம் முதல் இறுதி வரை இரண்டு நாய்கள் மட்டுமே நடித்துள்ளன. மதுரை மாவட்டத்தில் உள்ள டி.இராமநாதபுரம் கிராமத்தை சுற்றி உள்ள பகுதிகளில் வளர்ந்துள்ள இந்தப் படத்திற்கு வாசு ஒளிப்பதிவையும் முத்துமுனியசாமி படத்தொகுப்பையும், ரகுநாத் இசையையும் கவனித்துள்ள இந்தப் படத்தை தீபக்கார்த்திகேயன், சஞ்சய் கார்த்திகேயன் இருவரும் இணைத்தயாரிப்பையும் கவனிக்க, கதை, திரைக்கதை, வசனம் எழுதி செந்தில்குமார் சுப்ரமணியம் இயக்கி உள்ளார்.
“அம்மா நாயிடமிருந்து குட்டி நாயை ஒரு சைக்கோ திருடி சென்றுவிடுகிறான். தனது குட்டியை மீட்க அம்மா நாய் எப்படி கண்டுபிடித்து மீட்டு வருகிறது என்பதை கதைக்களமாக்கி அதை விறுவிறுப்பான திரைக்கதையில் திகிலும், திரில்லும் கலந்து படத்தை இயக்கி உள்ளேன். புது முயற்சியாய் இந்த படத்தில் இரு நாய்களை தவிர வேறு யாரையும் நடிக்க வைக்கவில்லை. கமர்ஷியலாக படத்தை மக்கள் பார்த்து ரசிக்கும்படி என் முதல் படமான கிளவர் படம் இருக்கும்” என்கிறார், இயக்குனர் செந்தில்குமார் சுப்ரமணியம்.
அடுத்த மாதம் திரைக்கு வர உள்ள இந்தப் படத்தை கார்த்திகேயன் பிரதர்ஸ் எண்டர்டெய்ன்மெண்ட் என்ற நிறுவனம் சார்பில் திப்பம்மாள் தயாரித்துள்ளார்.