Tuesday, September 17, 2024

இந்திய லெவல்ல வேறுமாதிரி இருக்க போது வாடிவாசல்… சூர்யா இதுக்கு அப்புறம் லெஜன்ட் தான் – மிஷ்கின்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் இணைந்து உருவாக்க இருந்த படம் ‘வாடிவாசல்’. இந்தப் படத்தின் அறிவிப்பு சில ஆண்டுகளுக்கு முன்பே வெளியிடப்பட்டிருந்தாலும், பல்வேறு காரணங்களால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தாமதமாகி வருகிறது. வெற்றிமாறன் தற்போது தனது ‘விடுதலை 2’ல் பிஸியாக இருப்பதால், சூர்யாவும் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருவதால் ‘வாடிவாசல்’ படத்தைத் தொடங்க முடியவில்லை.

வெற்றிமாறன் இயக்கத்தில் ‘விடுதலை’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களின் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது. ‘விடுதலை’ கடந்த ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பையும் வசூலையும் பெற்றது. தற்போது ‘விடுதலை 2’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கான டி-ஏஜிங் வேலைகளை மேற்கொள்ள, அமெரிக்கா செல்லவுள்ளார் வெற்றிமாறன்.

நடிகர் சூர்யா, இதற்கு முன்பு டெஸ்ட் ஷூட்டில் ஈடுபட்டிருந்தார். அவர் ஒரு ஜல்லிக்கட்டு காளையை வளர்த்து, அத்துடன் பயிற்சி மேற்கொண்டு வருவதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், தி ப்ரூஃப் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய மிஷ்கின் இந்தப் படம் குறித்தும், வாடிவாசல் படத்தின் கதைக்களம் குறித்தும் சமீபத்தில் வெற்றிமாறனிடம் பேசியதாகக் கூறினார். இந்தப் படம் இந்தியளவில் மிகப்பெரிய படமாக அமையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும், சூர்யா தொடர்ந்து சிறப்பான கதைகளில் நடிப்பதில் மகிழ்ச்சி தெரிவித்த மிஷ்கின், வாடிவாசல் படம் சூர்யாவின் கேரியரில் முக்கியமானதாக அமையும் என்றும், இந்தப் படம் வெளியான பின்னர் சூர்யா லெஜெண்டாக மாறிவிடுவார் என்றும் கூறினார். மேலும், அதிகமான புத்தகங்களைப் படிப்பவரான வெற்றிமாறன், வாடிவாசல் நாவலிலிருந்து எடுத்த கதைக்களம் குறித்து தன்னிடம் பேசியதாகவும் மிஷ்கின் கூறினார்.

- Advertisement -

Read more

Local News