Saturday, September 14, 2024

மூன்று கான்களை இயக்க எனக்கு ஆசை… கங்கனா ரணாவத் ஓபன் டாக்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

முன்னாள் பிரதமர் இந்திராவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள எமர்ஜென்சி என்ற படத்தை ஹிந்தியில் இயக்கி, அதே நேரத்தில் அந்த படத்தில் அவருடைய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் கங்கனா ரணாவத். இந்தியாவில் எமர்ஜென்சி பிறப்பிக்கப்பட்ட நிகழ்வுகளை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 6ஆம் தேதி படம் வெளியாக உள்ள நிலையில், அதன் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது.

இப்பட விழாவில் பேசுகையில் கங்கனா, “ஷாரூக்கான், அமீர்கான், சல்மான்கான் மூவரையும் எனது தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் நடிக்கவைக்க விரும்புகிறேன். மூவரும் மிகுந்த திறமை வாய்ந்தவர்கள் மட்டுமல்ல, ஹிந்தி சினிமாவுக்கு அவர்களால் மிகுந்த வருமானம் கிடைக்கிறது. மேலும், அவர்களால் சமூகத்தில் சில மாற்றங்களை உருவாக்க முடியும்” என்று கூறினார்.

மேலும், சமீபத்தில் நடந்த பார்லிமென்ட் தேர்தலில் ஹிமாச்சல் மாநிலத்தில் போட்டியிட்டு, பா.ஜ.க சார்பில் எம்பி.யாக வெற்றி பெற்றுள்ள கங்கனா, எம்பி.யான பிறகு வெளியாகும் அவரது முதல் படம் இதுவாகும்.

- Advertisement -

Read more

Local News