Saturday, September 14, 2024

சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றிய கல்கி பட இயக்குனர் நாக் அஸ்வின்… என்ன செய்தார் தெரியுமா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘மகாநடி,’ ‘கல்கி 2898 ஏடி’ படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்குப் பரிச்சயமானவர் தெலுங்கு இயக்குனர் நாக் அஸ்வின். ‘கல்கி 2898 ஏடி’ படத்தை 1000 கோடிக்கு மேல் வசூல் செய்ததன் மூலம், அவர் தற்போது பான் இந்தியா இயக்குனராகவும் பிரபலமாகியுள்ளார்.

எந்த அளவுக்கு உயர்ந்தாலும், தங்களது மண் மீதும் பழைய வாழ்க்கை மீதும் மாறாத பாசம் கொண்டவர்கள் சிலரே. அப்படிப்பட்டவராக நாக் அஸ்வின் இருப்பதாக டோலிவுட் உலகமும், ரசிகர்களும் அவரைப் பாராட்டுகின்றனர்.

தெலங்கானா மாநிலத்தின் நாகர்கர்நூல் மாவட்டத்தில் உள்ள அய்தோல் கிராமத்தின் வளர்ச்சிக்கு உதவ விரும்புவதாக நாக் அஸ்வின் முன்பு அறிவித்திருந்தார். அதன் பேரில், அந்த ஊரில் உள்ள பள்ளியில் 66 லட்ச ரூபாய் செலவில் புதிதாக நான்கு வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. அவற்றின் திறப்பு விழாவில் தனது பெற்றோருடன் கலந்து கொண்டுள்ளார். அவரின் அப்பா, அம்மா இருவருமே டாக்டர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஒரு கோயில் புனரமைப்பும் நாக் அஸ்வின் அளித்த நிதியுதவியால் நடந்து வருகிறதாம். மாணவர்களின் படிப்புக்காக வகுப்பறைகள் கட்டித் தந்த நாக் அஸ்வினுக்கு அந்த கிராம மக்கள் நன்றி தெரிவித்து பாராட்டியுள்ளனர்.

- Advertisement -

Read more

Local News