Saturday, September 14, 2024

இந்த திரைப்படம் என்னை உலுக்கி எடுத்துவிட்டது‌… வாழை படத்தை வாழ்த்திய ஆர்.ஜே.பாலாஜி !

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குனர் மாரி செல்வராஜ் கடைசியாக இயக்கிய “மாமன்னன்” படத்துக்கு பிறகு “வாழை” படத்தை இயக்கியுள்ளார். தனது சிறுவயது வாழ்க்கையில் நடந்த அவலங்களை திரைக்கதையாக்கி, அதை மிகுந்த வலியோடு கொண்டு வந்துள்ளார். இந்தப் படத்தை பார்த்த செலிபிரிட்டிகள் முதல் சாதாரண மக்கள்வரை தங்களது பெரும் ஆதரவை இந்தப் படத்துக்கு வழங்கியுள்ளனர்.

இந்த படம் விமர்சன ரீதியாக மட்டும் அல்லாமல், வசூல் ரீதியிலும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்திருக்கிறது. மாரி செல்வராஜ் இதுவரை இயக்கிய நான்கு படங்களுமே வெற்றியடைந்துள்ளதால், தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களின் பட்டியலில் அவர் இடம்பெற்றுள்ளார்.

இந்த நிலையில், நடிகரும் இயக்குநருமான ஆர்.ஜே. பாலாஜி “வாழை” படத்தை பற்றி பேசும்போது, “மாரி செல்வராஜின் ‘வாழை’ படத்தை பார்த்தேன். அந்தப் படம் என்னை ஆழமாக உலுக்கி எடுத்துவிட்டது. அழுகையை கட்டுப்படுத்த முடியவே இல்லை. அதிர்ச்சி கொடுக்கும் ஒரு வாழ்க்கையை படமாக மாற்றியிருக்கிறார். இந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கு எனக்கு இன்னும் சில நாட்கள் தேவைப்படலாம். எதிர்பார்த்தது ஒன்றாக இருந்தாலும், அங்கு நடந்தது முற்றிலும் வேறுபட்டது. படம் மிகுந்த நன்றாக உள்ளது” என்று கூறினார்.

- Advertisement -

Read more

Local News