Friday, April 12, 2024

“என் டைரக்சனுக்கு என்ன குறைச்சல்..?” – ரஜினியிடம் சண்டையிட்ட மனோபாலா..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ரஜினியின் புகழ் பெற்ற ‘பாட்சா’ படத்தை இயக்குநர் மனோபாலாதான் இயக்கவிருந்தார் என்பதை நம்ப முடிகிறதா..?

ஆனால் அதுதான் உண்மையாம். இதை மனோபாலாவே சொல்லியிருக்கிறார்.

“நடிகர் கமலுக்கு என் மேல ரொம்பவே வருத்தம். அவருடைய சர்க்கிள்ல இருந்தவங்கள்ல நான் மட்டும் கமர்ஷியல் இயக்குநராகவே மாறிப் போய் அதுலேயும் அதிகமாக படங்களை இயக்காமலும் விட்டுட்டேன்னு என் மேல ரொம்பவே வருத்தப்பட்டார். என்கிட்டேயும் சொன்னார்.

‘பாட்ஷா’ படத்தை நான்தான் இயக்குறதா இருந்தது. ‘ஊர்க்காவலன்’ படத்தின் வெற்றியினால் ‘சத்யா மூவிஸ்’ல என்னைக் கூப்பிட்டு “இந்தப் படத்தை நீங்க பண்ணுங்க”ன்னு சொல்லிட்டாங்க. நானும் சந்தோஷமா ஒத்துக்கிட்டு வந்துட்டேன்.

அப்போ ரஜினி அமெரிக்காவில் இருந்தார். ரஜினி சென்னைக்கு வரும்போது இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா ஏர்போர்ட்டுக்கே நேரா போய் ரஜினியை பார்த்திருக்கார். அப்புறம் மேல் “பாட்ஷா படத்தை சுரேஷ் கிருஷ்ணாதான் இயக்குகிறார்”ன்னு சொல்லிட்டாங்க.

எனக்குக் கோபம்ன்னா கோபம்.. நேரா ரஜினிகிட்டயே போயிட்டேன். “ஏன் ஸார்.. என் டைரக்சன் மேல உங்களுக்கு நம்பிக்கையில்லையா.. ஊர்க்காவலன் ஹிட்டாச்சே ஸார். ஏன் இப்படி செஞ்சீங்க..?”ன்னு ரொம்பக் கொதிச்சிட்டேன்.

ரஜினிக்கு உண்மையில் சத்யா மூவிஸ் அலுவலகத்தில் என்னை அழைத்துச் சொன்னதெல்லாம் தெரியாது. “ஸாரி மனோ.. எனக்கு சத்தியமா இது தெரியாது. ‘ஏற்கெனவே மனோபாலாகிட்ட சொல்லிட்டோமே’ன்னு அவங்க சொல்லியிருந்தால் நான் சுரேஷ் கிருஷ்ணாவை சொல்லியிருக்கவே மாட்டேன்…” என்றார்.

அப்புறம் லதாம்மா வந்து என்னை கூல் செய்றதுக்காக மோர் கொடுத்தாங்க. கொதிச்ச கொதிப்பு கொஞ்சம் அடங்கிப் போய் எந்திரிச்சு வந்துட்டேன். ஆனாலும், இன்றுவரையிலும் எனக்கு மிகப் பெரிய ஏமாற்றமாக இது தெரியுது..” என்று சொல்லியிருக்கிறார் நடிகரும், இயக்குநருமான மனோபாலா.

- Advertisement -

Read more

Local News