செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் T.D.ராஜா தயாரிக்கும் திரைப்படம் ‘கோடியில் ஒருவன்.’
இந்தப் படத்தில் விஜய் ஆன்டனி கதாநாயகனாக நடிக்கிறார். ஆத்மீகா நாயகியாக நடிக்கிறார். மற்ற நட்சத்திரங்களின் தேர்வு தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
ஒளிப்பதிவு – N.S.உதயகுமார், இசை – நிவாஸ் கே.பிரசன்னா, தயாரிப்பு – T.D.ராஜா, இணை தயாரிப்பு – ராஜா சஞ்சய், மக்கள் தொடர்பு – ரியாஸ் கே.அஹமது. ‘மெட்ரோ’ படத்தை இயக்கியவரான இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் இப்படத்தை இயக்குகிறார்.
இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ் வழங்க Dr.தனஞ்செயன் இப்படத்தை வெளியிடுகிறார்.
‘கோடியில் ஒருவன்’ படத்தின் முதல் பார்வை மற்றும் படத் தலைப்பை படக் குழுவினர் இன்று வெளியிட்டனர்.
இத்திரைப்படம் விஜய் ஆண்டனியின் 14-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.