Friday, April 12, 2024

‘தீ இவன்’ படத்திற்காக நவரசம் காட்டியிருக்கும் நாயகன் கார்த்திக்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மனிதன் சினி ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் நிர்மலா  தேவி  ஜெய முருகன் தயாரிக்கும் படம் ‘தீ இவன்’. 

இந்தப் படத்தை ‘ரோஜா மலரே’, ‘அடடா என்ன அழகு’ படங்களை இயக்கியவரும்,  ‘சிந்துபாத்’  படத்தை தயாரித்தவருமான  டி.எம் ஜெயமுருகன் இயக்குகிறார்.  அவரே இந்தப் படத்திற்கு இசையமைத்து,  கதை,  திரைக்கதை, வசனம்  பாடல்களையும்  எழுதி அசத்தியுள்ளார்.

இந்த படத்தில் நவரச நாயகன் கார்த்திக் பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும்  கதாநாயகனாக நடிக்கிறார். அவருடன் சுகன்யா, ஐஸ்வர்யா லட்சுமி, அர்த்திகா, சேது அபிதா, ஜான் விஜய், சிங்கம்புலி, இளவரசு, மஸ்காரா அஸ்மிதா,  ஹேமந்த் மேனன், இயக்குநர் சரவண சக்தி,  ராஜேஸ்வரி,  ஸ்ரீதர்  ஆகியோரும்  நடிக்கிறார்கள்.  இவர்களுடன்  மறைந்த  குணசித்திர  நடிகர்  பெரைரே  முக்கிய  கதாப்பாத்திரத்தில்  நடித்துள்ளார்.

மேலும் இயக்குநர்  ஜெய முருகன்  மற்றும்  அறிமுக  நடிகர்  சுமன்.ஜெ இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு  –  ஒய்.என்.முரளி, பிண்ணனி இசை, படத் தொகுப்பு – அலிமிர்சாக், கலை இயக்கம் –  சோலை அன்பு, நடன இயக்கம்  – கூல் ஜெயந்த், சண்டை இயக்கம் – கிக்காஸ் காளி, மக்கள் தொடர்பு – மணவை புவன், தயாரிப்பு நிர்வாகம்  -அப்பு, எழுத்து, இசை- பாடல்கள், இயக்கம் – டி.எம்.ஜெயமுருகன்.

படம் பற்றி இயக்குநர் இயக்குநர் டி.எம்.ஜெயமுருகன் பேசும்போது, “இன்றைய  நவீன  காலத்தில்  நம்  கிராமத்து  பண்பாடும்,  நாகரீகமும்,  உறவுகளும்  மறைந்து  வருகிறது. அதனை இந்தத் தலைமுறைக்கு மீட்டுத் தரும்  படமாக  இது  உருவாகியுள்ளது. 

அண்ணன்,  தங்கை  பாசத்தை  சொல்ல  நிறைய  படங்கள்  வந்திருந்தபோதும் இதில் ரத்தமும், சதையுமான அந்த உறவை சொல்கிறோம்.  உயிரைவிட மானம் பெரிது என்பதுதான் தமிழர்களின் உச்சபட்ட நாகரீகம். அதை  உணர்த்தும் படமாக இது இருக்கும்.

இதுவரையிலும் படப்பிடிப்பு  70  சதவீதம்  முடிவடைந்துள்ளது.  தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு  நடந்து வருகிறது.  ஒரு பாடல் காட்சியை பிரபல  பாலிவுட் நடிகையை வைத்து மும்பையில் பிரமாண்ட செட் அமைத்துப் படமாக்க  இருக்கிறோம்.

இந்த படத்தில் நவரச நாயகன் கார்த்திக் ‘ஹார்லி டேவிட்சன்’ பைக்கில் டூப்  போடாமல் பல சண்டைக் காட்சிகளில் பல சாகசங்களை செய்துள்ளார்.  இன்றைக்கு நடிக்க வரும்இளம் நடிகர்களே இந்த காட்சிகளை நடிக்க  தயங்குவார்கள் அப்படியான காட்சிகளில்கார்த்திக் தானே  நடித்து  அசத்தியுள்ளார்.  அந்த  சண்டை காட்சிகள் படத்தில் பிரம்மாண்டமாக  இருக்கும்.

அது மட்டுமல்லாது ‘ஹம்மர்’ என்ற விலையுர்ந்த கார் ஒன்றை வைத்து  பாடல்  காட்சி ஒன்றை ஹாலிவுட் தரத்தில் எடுத்துள்ளோம் அதுவும் பிரம்மாண்டமாக  வந்திருக்கிறது. இந்த படம்  வெளியான பிறகு  நடிகர்  கார்த்திக்  மீண்டும்  பல  படங்களில்  நாயகனாக நடிப்பார்.

500 பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விளையாட்டு போட்டி ஒன்றை  பிரம்மாண்டமாக அண்மையில் படமாக்கினோம். கொரோனா காலம் என்பதால் பள்ளி மாணவர்களை  சமூக இடைவெளியுடன் நடிக்க வைத்து படமாக்கி இருக்கிறோம். மிகப் பெரிய பட்ஜெட்டில் இந்தப் படம்  தயாராகி  உள்ளது…” என்கிறார்  படத்தின்  இயக்குநரான  டி.எம்.ஜெயமுருகன்.

- Advertisement -

Read more

Local News