Thursday, April 11, 2024

சிம்புவின் ‘பத்து தல’ படத்தின் நான்கு கட்ட படப்பிடிப்பும் நிறைவு..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் சிம்பு தற்போது இயக்குநர் கிருஷ்ணாவின் இயக்கத்தில் ‘பத்து தல’ படத்தில் நடித்து வருகிறார். 2017-ம் ஆண்டு கன்னடத்தில் சிவராஜ் குமார் நடிப்பில் வெளியாகி பிளாக் பஸ்டர் ஆன ‘மஃப்ட்டி’ படத்தின் ரீமேக்குதான் இந்த ‘பத்து தல’ படம்.

நிழல் உலக தாதாவை தேடிப் போகும் ரகசிய போலிஸ் பற்றிய கதைதான் இந்தப் படம். சிவராஜ் குமார் நடித்த படங்களில் மிக அதிக வசூலை அள்ளியதும் இந்தப் படம்தான்.

ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் K. E. ஞானவேல் ராஜா தயாரித்து வரும் இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். பிரவீன் K. L. படத் தொகுப்பு  செய்கிறார்.

இந்தப் படத்தில், சிம்புவுடன் கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கலையரசன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.  இயக்குநர் கௌதம் மேனன், சிம்புவுக்கு வில்லனாக நடிக்கிறார்.

பத்து தல படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்திருந்த நிலையில், இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு விசாகப்பட்டினத்திலும், மூன்றாம் கட்டப் படிப்பு கன்னியாகுமரியில் நடந்திருந்தது. நான்காம் கட்ட படப்பிடிப்பு கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்லாரி பகுதியில் நடந்தது. இந்தப் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மற்றும் கோவிலூரில் நடந்ததென்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த ‘பத்து தல’ படத்தின் படப்பிடிப்பு கர்நாடக மாநிலத்தில் உள்ள துங்கபத்திரை அணையில் நடந்துள்ளது. அந்தப் படப்பிடிப்பின் நடுவே ரசிகர்களுடன் சிம்பு எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி உள்ளன.

மேலும் இயக்குநர் கிருஷ்ணாவும், நாயகன் சிம்புவும் ஆற்றின் கரையில் பேசுவது போலவும், கௌதம் கார்த்திக்கும், சிம்புவும், இயக்குநர் கிருஷ்ணாவுடன் சேர்ந்து நடந்து வரும் புகைப்படங்களும் வெளியாகி உள்ளன.

இந்தப் பத்து தல’ திரைப்படம் இந்த ஆண்டு, டிசம்பர் 14-ம் தேதி வெளியாகவுள்ளது.

- Advertisement -

Read more

Local News