மலையாளத்தில் கடந்த ஜூன் 6ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘ஆபயந்தர குற்றவாளி’. தேர்ந்தெடுத்த கதையமைப்புகளில் நடித்து வருகிற ஆசிப் அலி, இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இயக்குநராக சேதுநாத் பத்மகுமார் பணியாற்றியுள்ளார். இந்தப் படம், மலையாள சினிமாவின் அடுத்த வெற்றி படமாகவும், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக, இதுவரை குடும்ப வன்முறை பெரும்பாலும் பெண்களின் பார்வையில் இருந்து திரைப்படங்களில் சித்தரிக்கப்பட்டது.
ஆனால் இந்தப் படம் முதன்முறையாக ஆண்களின் கண்ணோட்டத்தில் இருந்து குடும்ப வன்முறையை, அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை மற்றும் சட்டங்கள் ஆண்களுக்கு எதிராக எவ்வாறு தவறாக பயன்படுத்தப்படுகின்றன என்பதை விறுவிறுப்பாக வெளிப்படுத்துகிறது.