V.Z.துரை – சுந்தர்.C கூட்டணியில் வெளியான ‘இருட்டு’ வெற்றி படத்திற்கு பிறகு மீண்டும் இருவரும் இணையும் படம் ‘தலைநகரம்-2.’
இந்தப் படத்தை ரைட் ஐ தியேட்டர் தயாரிப்பு நிறுவனம் சார்பாக V.Z.துரை, S.M.பிரபாகரன் இருவரும் இணைந்து பிரம்மாண்டமாக தயாரிக்கின்றனர்.
இயக்குநர் V.Z.துரை தயாரிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது
ஒளிப்பதிவு – கிருஷ்ணசாமி, வசனம் – மணிஜி, இணை தயாரிப்பு – RS வெங்கட், APV மாறன்.
இன்று இப்படத்தின் பூஜை இனிதே நடைபெற்றது.
இப்படத்தின் மற்ற நடிகர் நடிகையர் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.
இந்தப் படத்தின் பூஜை நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர் துரை, நாயகன் சுந்தர்.சி மற்றும் படத்தில் பங்கு பெறும் கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டனர்.