Thursday, April 11, 2024

“ஆக்சன்னு சொல்லிட்டா ‘பீம ராஜா’ மாதிரி ஆயிருவாரு செல்வராகவன்” – நட்டி நட்ராஜின் ஆச்சரியம்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘பகாசூரன்’ என்ற தமிழ்ப் படத்தில் நடிகர் நட்டி நட்ராஜூம், இயக்குநர் செல்வராகவனும் இணைந்து நடிக்கிறார்கள். இயக்குநர் செல்வராகவன் நடிகராக எப்படி நடிக்கிறார் என்ற கேள்விக்கு நட்டி நட்ராஜ் பதில் அளித்தபோது, “இயக்குநர் செல்வராகவனை எனக்கு ஒரு இயக்குநராகத்தான் தெரியும். சாணிக்காயிதம் வெப் சீரீஸ்லதான் அவரை ஒரு நடிகராப் பார்த்தேன். ஆனால் அந்தப் படம் ரிலீஸாகுறதுக்கு முன்னாடியே நாங்க ரெண்டு பேரும் இந்தப் படத்துல சேர்ந்து நடிச்சுட்டோம்.

இந்தப் படத்தில் ஒரு விஷயத்தைத் தேடி நாங்கள் இருவரும் வெவ்வேறு வழிகள்ல டிராவல் செய்வோம். அதனால் எனக்கும், அவருக்கும் குறைந்த காம்பினேஷன் காட்சிகள்தான் இருந்தன. ஸ்பாட்ல சாதாரணமாத்தான் நின்னு பேசிட்டிருப்பார். ஆனா ரோல், கேமிரா, ஆக்சன்னு சொல்லிட்டா போதும் அப்படியே பீமராஜா மாதிரி ஆயிருவார்.

ஒவ்வொரு காட்சிலேயும் அவர் நடிச்சு முடிச்சதும் அவரைப் பார்த்து ஆச்சரியப்பட்டிருக்கேன். அவர் என்னைப் பார்த்து லைட்டா சிரிப்பார். அவர்கிட்ட இந்த அளவுக்கு பர்பார்மென்ஸ் இருக்குறதுனாலதான் அவர் இயக்கத்துல நடிக்கிறவங்ககிட்ட ஈஸியா வேலை வாங்க முடியுதுன்னு நினைக்கிறேன்..” என்றார் நடிகர் நட்டி நட்ராஜ்.

- Advertisement -

Read more

Local News