Friday, April 12, 2024

“என்னை சிறந்த நடிகையாகப் பார்த்தவர் சத்யராஜ் ஸார்தான்..” – சொல்கிறார் நடிகை விசித்ரா..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ்ச் சினிமாவில் மறக்க முடியாத ஒரு கவர்ச்சி ப்ளஸ் வில்லி நடிகையென்றால் அது விசித்ராதான்.

‘சின்னத்தாயி’ படத்தில் முகம் தெரிய ஆரம்பித்த அவர், அதற்கடுத்த படமான ‘தலைவாசல்’ படத்தில் ‘மடிப்பு அம்சா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலமாக ஒரே நாளில் மிகவும் பிரபலமானார்.

அதற்குப் பிறகு அடுத்த பத்தாண்டுகளில் பல்வேறு முக்கியத் திரைப்படங்களில் காமெடி, கவர்ச்சி, வில்லியாக பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.

ஒரு சில படங்களில் மட்டுமே அவரது கதாபாத்திரம் சிறப்பாக, நேர்மையானதாக இருந்தது. அப்படியொரு கதாபாத்திரம் அவருக்கு நடிகர் சத்யராஜ் இயக்கிய ‘வில்லாதி வில்லன்’ படத்தின் மூலமாகக் கிடைத்தது.

இத்திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றியடையவில்லையென்றாலும் படம் பரவலாகப் பேசப்பட்டது. படத்தில் ‘ஹிட்லர்’ வேட சத்யராஜூக்குப் பிறகு ‘அம்சவல்லி’ என்ற அமைச்சர் கதாபாத்திரத்தில் நடித்திருந்த விசித்ராவும் அனைவரையும் கவர்ந்தார்.

இந்தப் படத்தில் இந்தக் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலமாக விசித்ரா தனது பழைய இடத்தை இழந்துவிட்டார். அதனால்தான் அவருக்கு மார்க்கெட் குறையத் துவங்கியது என்ற பேச்சு அன்றைய திரையுலகத்தில் பரவியிருந்தது.

இது குறித்து விசித்ரா சமீபத்தில் அளித்த பேட்டியில், “சத்யராஜ் ஸார், என்னை நம்பி இப்படி ஒரு நல்ல கதாபாத்திரத்தை எனக்கு கொடுத்தார். பலரும் என்னை ஒரு கவர்ச்சிப் பொருளாகப் பார்த்த நிலையில் இப்படி என்னை ஒரு சிறந்த நடிகையாக நினைத்தவர் அவர் ஒருவர்தான்…” என்று சொல்லியிருக்கிறார்.

- Advertisement -

Read more

Local News