Thursday, April 11, 2024

விமர்சனம்: பொம்மை

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஃபீல்குட் படங்களை எடுப்பதற்கு பெயர் போன ராதாமோகன் எஸ்.ஜே.சூர்யாவை வைத்து வித்தியாசமான படத்தை எடுத்திருக்கிறார்.

பொம்மை ஃபேக்டரியில் பெயிண்ட் அடிப்பவராக வேலை செய்கிறார் ராஜ் குமார்(எஸ்.ஜே.சூர்யா). சென்னையில் தனியாக வீடு எடுத்து தங்கியிருக்கிறார். எந்த கெட்டப்பழக்கமும் இல்லாதவர்.

ஃபேக்டரிக்கு வரும் பொம்மை ஒன்று தன் பள்ளி காலத்து காதலியான நந்தினியை(ப்ரியா பவானிசங்கர்) ராஜுவுக்கு நினைவூட்டுகிறது. இதையடுத்து கற்பனையில் அந்த பொம்மையை காதலித்து தான் விரும்பிய வாழ்க்கையை வாழ்கிறார். பொம்மையை நிஜம் என நினைக்கிறார்.

அந்த பொம்மையை மட்டும் விற்பனை செய்ய வேண்டாம் என ஃபேக்டரி சூப்பர்வைசரிடம் கூறுகிறார் ராஜு. இந்நிலையில் அவர் ஊருக்கு சென்ற நேரத்தில் நந்தினி போன்று இருக்கும் பொம்மை சென்னையில் இருக்கும் ஷோரூம் ஒன்றுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஊரில் இருந்து திரும்பி வந்த ராஜு, நந்தினி போன்று இருக்கும் பொம்மையை காணவில்லை என்றதும் கோபத்தின் உச்சிக்கே சென்று கொலைகாரராக மாறிவிடுகிறார். இதையடுத்து நந்தினி பொம்மை இருக்கும் கடையை தேடிக் கண்டுபிடித்து அங்கு வேலை செய்கிறார். தான் நினைத்த வாழ்க்கையை அந்த பொம்மையுடன் சந்தோஷமாக வாழத் துவங்குகிறார்.

ராஜுவின் சந்தோஷம் நிலைக்குமா, கொலை வழக்கில் போலீசாரிடம் சிக்குவாரா என்பதே கதை.

ஒரு ஆண், பொம்மை இடையேயான காதலா, இது வித்தியாசமாக இருக்கிறதே என முதலில் ஒரு உற்சாகம் ஏற்படுகிறது. ஆனால் படம் செல்லச் செல்ல அந்த உற்சாகம் குறைந்துவிடுகிறது.

ஹீரோ, பொம்மை இடையேயான காதலில் மட்டுமே கவனம் செலுத்தியிருக்கிறார் ராதாமோகன்.

படத்தின் இரண்டாம் பாதியில், பொம்மையுடன் நேரம் செலவிட விரும்பி அது விற்பனை செய்யப்பட்ட ஷோரூமில் வேலைக்கு சேர்கிறார் ராஜு. வாலிபர், பொம்மை இடையேயான காதலை காட்டுவதில் தவறு இல்லை. ஆனால் அதை மட்டுமே காட்டி, டூயட் எல்லாம் பாடும்போடு தியேட்டரில் இருப்பவர்களுக்கு பொறுமை போய்விடுகிறது.

மனநல பிரச்சனைகளுடன் இருப்பவராக நடிக்கவில்லை, வாழ்ந்திருக்கிறார் எஸ்.ஜே. சூர்யா. கிளைமாக்ஸ் காட்சியில் கைதட்டல்களை பெறுகிறார். ப்ரியாவுடன் சேர்ந்து படத்தை தன் தோள்களில் தாங்குகிறார். அழகான பொம்மையாக வந்து கவர்ந்திருக்கிறார் ப்ரியா பவானிசங்கர். இன்னொரு ஹீரோயினான சாந்தினிக்கு பெரிதாக வேலை இல்லை.

படத்தில் வரும் கதாபாத்திரங்கள் பேசுவதை நம்மால் எளிதில் கணிக்க முடிகிறது. மேலும் அடுத்து என்ன காட்சி என்பதையும் கணிக்க முடிகிறது. திரைக்கதையில் வலுவில்லை. பொம்மை படத்தில் லாஜிக் எல்லாம் பார்க்கக் கூடாது.

முதல் பாதியுடன் ஒப்பிடும்போது இரண்டாம் பாதி நன்றாக இருக்கிறது.

- Advertisement -

Read more

Local News