Friday, April 12, 2024

1 ஹீரோவுக்காக, 3 ஹீரோயின்கள் மல்லுக் கட்டும் ‘ராயர் பரம்பரை’ திரைப்படம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

காதலே பிடிக்காத.. காதல் என்றாலே விலகி ஓடுகிற ஒரு கதாநாயகனையும், 3 கதாநாயகிகளையும் வைத்து ‘ராயர் பரம்பரை’ என்ற பெயரில் ஒரு புதிய படம் தயாராகி வருகிறது.

தயாரிப்பாளர் சின்னச்சாமி மவுனகுரு இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தில் ‘கழுகு’ கிருஷ்ணா கதாநாயகனாகவும், சரண்யா நாயர், தெலுங்கு நடிகையான அனுசுலா, மும்பை மாடல் அழகியான கிருத்திகா ஆகிய மூன்று பேர் நாயகிகளாகவும் நடித்துள்ளனர்.

ஆனந்தராஜ் வில்லனாக நடித்திருக்கிறார். இவர்களுடன் கே.ஆர்.விஜயா, கஸ்தூரி, மொட்டை ராஜேந்திரன், மனோபாலா, ஆர்.என்.ஆர்.மனோகர் ஆகியோரும் நடித்துள்ளனர்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இந்தப் படத்தை இயக்கியிருப்பவர் டி.ராம்நாத்.

படப்பிடிப்பு பொள்ளாச்சியில் 45 நாட்கள் நடைபெற்று முடிவடைந்துள்ளது.

இந்தப் படத்தில் செண்டிமெண்ட் கலந்து கதை சொல்லியிருப்பதாக இயக்குநர் டி.ராம்நாத் கூறியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News