Friday, April 12, 2024

மிஷ்கின் இயக்கும் ‘பிசாசு-2’ படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியது

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குநர் மிஷ்கினின் இயக்கத்தில் பிசாசு-2’ படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியுள்ளது.

இயக்குநர் மிஷ்கின் இயக்கி வரும் புதிய திரைப்படம் ‘பிசாசு-2’. அவருடைய இயக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பையும், பெயரையும் பெற்றுக் கொடுத்த பிசாசு படத்தின் அடுத்த பாகமாக இத்திரைப்படம் உருவாகி வருகிறது. ஆனால் கதையின் தொடர்ச்சியில்லையாம்.

இந்தப் படத்தில் ஆண்ட்ரியா, பூர்ணாஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தில் ஒரு காட்சியில் ஆண்ட்ரியா முழு நிர்வாணமாக நடித்ததாகக்கூட செய்திகள் பரவின.

கொரோனா-2-ன் தாக்குதலின்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது. லாக் டவுன் காரணமாக இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

இப்போது லாக் டவுன் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதால் ‘பிசாசு-2’ படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியுள்ளது. திண்டுக்கல் அருகேயுள்ள மீனாட்சி நாயக்கன்பட்டியில் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறதாம்.

இந்த ‘பிசாசு-2’ படத்தில் அண்மையில் நடிகை நமீதா கிருஷ்ணமூர்த்தியும் நடிக்கிறார் என்று லேட்டஸ்ட் தகவல்கள் தெரிவித்துள்ளன.

மேலும், இந்த படத்தில் விஜய் சேதுபதி பேய் ஓட்டுபவர் கதாபாத்திரத்தில் கெஸ்ட் ரோல் செய்யவிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனாலேயே இந்த பிசாசு-2’ படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

- Advertisement -

Read more

Local News