Touring Talkies
100% Cinema

Monday, November 10, 2025

Touring Talkies

எந்த மொழியாக இருந்தாலும் ரசிகர்கள் நிச்சயம் நல்ல படத்தை பாராட்டுவார்கள் – நடிகர் சமுத்திரக்கனி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் துல்கர் சல்மான் நடித்துள்ள ‘காந்தா’ திரைப்படத்தை செல்வமணி செல்வராஜ் இயக்கியுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் இப்படம் வரும் நவம்பர் 14ஆம் தேதி வெளியாக உள்ளது. இதனை முன்னிட்டு சமீபத்தில் கொச்சியில் இப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள சமுத்திரக்கனி, ஏற்கனவே மோகன்லாலுடன் இணைந்து நடித்த ‘சிகார்’ மற்றும் ‘ஒப்பம்’ போன்ற படங்கள் மூலம் மலையாள ரசிகர்களிடம் பிரபலமானவர்.

அந்த நிகழ்வில் அவர், பிரியதர்ஷன் இயக்கிய ‘ஒப்பம்’ படப்பிடிப்பு நேரத்தில் நடந்த ஒரு சம்பவத்தை நினைவுகூர்ந்தார். அதுகுறித்து சமுத்திரக்கனி கூறியதாவது: “ஒப்பம் படப்பிடிப்பு முடிந்த பிறகு பிரியதர்ஷன் சார் என்னிடம் சொன்னார் — ‘கேரள ரசிகர்கள் உங்களை ஒருபோதும் மறக்க மாட்டார்கள். உங்களுக்கான வெற்றி கொஞ்சம் தாமதமாக வந்தாலும் பரவாயில்லை. ஆனால், ஒருபோதும் தவறான படங்களைத் தேர்ந்தெடுக்காதீர்கள். எப்போதும் நல்ல கதைகளில் மட்டுமே நடியுங்கள்’ என்று கூறினார். அந்த வார்த்தைகள் எனக்கு மிகப் பெரிய ஊக்கமாக இருந்தன. தற்போது ‘காந்தா’ என்ற அருமையான கதையுடன் மீண்டும் மலையாள திரையுலகிற்கு வந்திருக்கிறேன். எந்த மொழியாக இருந்தாலும், உண்மையான ரசிகர்கள் எப்போதும் நல்ல படங்களையே பாராட்டுவார்கள்,” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.

அதோடு, ‘காந்தா’ படப்பிடிப்பில் துல்கர் சல்மானுடன் இணைந்து நடித்த அனுபவம் குறித்து சமுத்திரக்கனி மேலும் பகிர்ந்துகொண்டார். “துல்கர் சல்மானுடன் நடித்த காட்சிகளில் நான் ஒருபோதும் முதல் டேக்கிலேயே ஓகே செய்ய முடியவில்லை. காரணம், அவர் நடிப்பை பார்த்தவுடன் நான் ஆச்சரியத்தில் மூழ்கி, அவரை பார்த்துக்கொண்டே இருந்தேன். இதை இயக்குனர் செல்வமணி செல்வராஜ் கவனித்து, ‘சார், நீங்கள் ஒவ்வொரு டேக்கிலும் துல்கர் சல்மானையே பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள், சரிதானே?’ என்று நகைச்சுவையாக கேட்டார். அவருடன் நடித்த அனுபவம் எனக்கு மறக்க முடியாத ஒன்று,” என்று புன்னகையுடன் கூறினார் சமுத்திரக்கனி.

- Advertisement -

Read more

Local News