Thursday, April 11, 2024

“நீர்ப்பறவை-2-ம் பாகம் வருகிறது” – இயக்குநர் சீனு ராமசாமி அறிவிப்பு

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழில் தற்போது 2-ம் பாகம் படங்களுக்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. ‘எந்திரன்’, ‘விஸ்வரூபம்’, ‘பில்லா’, ‘சாமி’, ‘சண்டக்கோழி’, ‘வேலை இல்லா பட்டதாரி’, ‘கோலி சோடா’, ‘சென்னை 28’ உள்ளிட்ட படங்களின் இரண்டாம் பாகங்கள் வந்துள்ளன. ‘பொன்னியின் செல்வன்-2’-ம் பாகம் தயாராகி உள்ளது. ‘இந்தியன் 2-ம் பாகம்’ படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது.

இந்த நிலையில் அடுத்து ‘நீர்ப்பறவை’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக அந்த படத்தின் இயக்குநரான சீனு ராமசாமி அறிவித்துள்ளார். ‘நீர்ப்பறவை’ படம் கடந்த 2012-ல் திரைக்கு வந்து வரவேற்பை பெற்றது. இதில் விஷ்ணு விஷால், சுனைனா, நந்திதா தாஸ், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர். கடலோரத்தில் வாழும் ஒரு இளைஞனின் வாழ்வியல் இந்தப் படத்தில் கதையாக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் ‘நீர்ப்பறவை’ படம் வெளியாகி 10 ஆண்டுகள் ஆனதை தொடர்ந்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுமா? என்று ரசிகர்கள் வலைத்தளத்தில் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். இதையடுத்து இயக்குநர் சீனு ராமசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்று வெளியிட்டுள்ள பதிவில், “நீர்ப்பறவை பாகம்-2′ தொடங்கப்படும். ‘நீர்ப்பறவை’ அதன் பத்தாண்டுகளில் தங்கள் இதயங்களில் கூடு கட்ட அனுமதித்த மக்களுக்கும், என் கலைபெருமக்களுக்கும் நன்றி” என்று கூறியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News