Thursday, April 11, 2024

கிராமத்துப் பின்னணியில் தயாராகும் ‘மூத்தகுடி’ படம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தி ஸ்பார்க்லேண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்து பலரின் பாராட்டைப் பெற்ற “சாவி” திரைப்படத்தை தொடர்ந்து அந்நிறுவனத்தினர் தங்களது இரண்டாவது படமாக “மூத்தகுடி” என்று பெயரிடப்பட்டுள்ள படத்தை தயாரிக்கின்றனர்.

இப்படத்தில் ராசு மதுரவன் இயக்கத்தில் வெளியான முத்துக்கு முத்தாக’, ‘கோரிப்பாளையம்’, மற்றும் ‘சாவி’ படத்தில் கதாநாயகனாக நடித்த பிரகாஷ் சந்திராவும், ‘மாயாண்டி குடும்பத்தார்’ படத்தில் கதாநாயகனாக நடித்த தருண் கோபியும் இணைந்து நடிக்கின்றனர்.

விசாகப்பட்டினத்தை சேர்ந்த அன்விஷா இப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். மேலும் இப்படத்தில் R.சுந்தர்ராஜன், ராஜ்கபூர், சிங்கம் புலி, யார் கண்ணன், சாம்ஸ் உள்ளிட்ட பலர் நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு பழம்பெரும் நடிகை K.R.விஜயாவும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

தயாரிப்பு நிறுவனம் – தி ஸ்பார்க்லேண்ட் (The Sparkland), திரைக்கதை இயக்கம் – ரவி பார்கவன், ஒளிப்பதிவு – ரவிசாமி, இசை – சுரேஷ் முருகானந்தம் (அறிமுகம்), படத் தொகுப்பு – சுரேஷ் அர்ஸ், கதை வசனம் – M.சரக்குட்டி, பாடல்கள் – நந்தலாலா, சண்டைப் பயிற்சி இயக்கம் – சரவெடி’ சரவணன், பத்திரிகை தொடர்பு – சதீஷ் (AIM).

‘வெல்டன்’, ‘கடைசி பெஞ்ச் கார்த்தி’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநரான ரவி பார்கவன் இந்த மூத்தகுடி’ படத்திற்கு திரைக்கதை எழுதி இயக்குகிறார்.

1970-களில் கோவில்பட்டி அருகில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தைதான் இந்தப் படத்தின் கதைக் களமாக்கியிருக்கிறார்கள். எனவே 1970 மற்றும் 1980-களில் உள்ளது போன்ற இடங்களை தேர்வு செய்து படப்படிப்பு நடத்துகின்றனர்.

கோவில்பட்டி, சாத்தூர், சங்கரன்கோவில், எட்டயபுரம், கயத்தாறு, திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறுகிறது.

- Advertisement -

Read more

Local News