இயக்குநர் பொன்ராமின் இயக்கத்தில் சசிகுமார், சமுத்திரக்கனி, மிருணாளினி ரவி நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘எம்.ஜி.ஆர்.மகன்’.
இத்திரைப்படம் வரும் ஏப்ரல் 23-ம் தேதியன்று திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இன்று அந்தப் படத்தை வெளியிடும் ‘ஸ்கிரீன் சீன்’ என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், இத்திரைப்படத்தின் வெளியீடு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
“தற்போது கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக இருப்பதால் அனைவரின் நலனையும் கருத்தில் கொண்டு படத்தை ஒத்தி வைப்பதாக..” அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
மேலும், “விநியோகஸ்தர்களின் வேண்டுகோளுக்கு இனங்க, எங்கள் எம்.ஜி.ஆர் மகன் திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை ஒத்தி வைக்க முடிவு எடுத்திருக்கிறோம்.
தமிழ்நாடு முழுவதும் விநியோகஸ்தர்களுடன் கலந்து ஆலோசித்த பின்னர், சூழல் மிகவும் உகந்ததாக மாறும் பட்சத்தில் எம்.ஜி.ஆர் மகன் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி பின்னர் அறிவிக்கப்படும்…” என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.