Friday, April 12, 2024

இதுவரையிலும் பார்த்திராத கதைக் களத்தில் உருவாகிறது ‘கலியுகம்’ திரைப்படம்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஆர்.கே.இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பாக ப்ரைம் சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான கே.எஸ்.ராமகிருஷ்ணா பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘கலியுகம்’.  

இந்தப் படத்தின் மையக் கதாபாத்திரத்தில் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கவிருக்கிறார்.

தயாரிப்பு நிறுவனம் – ஆர்.கே.இண்டர்நேஷனல், ப்ரைம் சினிமாஸ், தயாரிப்பாளர் – கே.எஸ்.ராமகிருஷ்ணா, எழுத்து, இயக்கம் – பிரமோத் சுந்தர், ஒளிப்பதிவு – ராம் சரண், கலை இயக்கம் – என்.சக்தி வெங்கட்ராஜ் , படத் தொகுப்பு – நிமல் நாசீர், ஆடை வடிவமைப்பாளர் – ப்ரவீன் ராஜா, ஒலி வடிவமைப்பு – கெளரி சங்கர் மற்றும் ஜெய்சன் ஜோஷ், மக்கள் தொடர்பு – யுவராஜ்.

இந்தப் படத்தை இயக்குநர் பிரமோத் சுந்தர் இயக்கவுள்ளார். இவர் யாரிடமும் உதவி இயக்குநராக பணி புரிந்ததில்லை விளம்பரத் துறையில் பணி புரிந்து, சில குறும் படங்களை இயக்கியுள்ளார்.

ஒரு பேரழிவுக்கு பிந்தைய உலகம் எப்படியிருக்கும் என்ற மையக் கருத்தைக் கொண்ட களமாக இந்தப் படம் உருவாகிறது.

முன்னோக்கிய கதைக் களம் என்பதால் கலை இயக்குநரின் பணி என்பது மிகவும் முக்கியமானது.  இதற்காக பல்வேறு விஷயங்களை ஆராய்ச்சி செய்து, இந்தப் படத்துக்காக மிகப் பெரிய அரங்குகளைப் பிரம்மாண்டமாக உருவாக்கியுள்ளார் கலை இயக்குநர் என்.சக்தி வெங்கட்ராஜ். இந்த அரங்குகள் பார்வையாளர்களைக் கண்டிப்பாக ஆச்சரியப்படுத்தும்.

இதுவரை தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, இந்திய சினிமாவிலேயே வந்திராத ஒரு புத்தம் புதிய கதைக் களத்துடன் இளம் படை ஒன்று களம் காணவுள்ளது.

காட்சியமைப்பு, கதைக் களம் என அனைத்திலும் புதுமையைக் கொண்டு வரவுள்ள இந்தப் படம் கண்டிப்பாக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறும் நம்புகிறது படக் குழு.

காட்சியமைப்புகள், திரைக்கதை, அரங்குகள் என அனைத்துமே பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தும் என்கிறார் இயக்குநர் பிரமோத் சுந்தர்.

ஹாரர், த்ரில்லர் பாணியில் உருவாகும் இதன் படப்பிடிப்பு சென்னையில் இன்று பூஜையுடன் துவங்கியது.  இந்தப் பூஜையில் நாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத்தும், படக் குழுவினரும் கலந்து கொண்டனர்.

- Advertisement -

Read more

Local News