Saturday, September 21, 2024

“கர்மா யாரையும் விடாது என்பதை நம்புகிறேன்” – ஜீவி பட நாயகன் வெற்றியின் அனுபவம் ..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கடந்த 2019-ம் ஆண்டு ‘எட்டு தோட்டாக்கள் புகழ்’ நடிகர் வெற்றி, கருணாகரன் ஆகியோர் நடிப்பில் வித்தியாசமான கதை அம்சத்துடன் வெளியாகி ரசிகர்கள், விமர்சகர்கள் மட்டுமல்லாது திரையுலக பிரபலங்கள் அனைவரிடமும் பாராட்டுக்களை பெற்ற படம் ஜீவி’.

இயக்குநர் விஜே கோபிநாத் இயக்கிய இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது ‘ஜீவி-2’ என்ற பெயரில் உருவாகியுள்ளது.

மாநாடு’ வெற்றி படத்தை தொடர்ந்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.

முதல் பாகத்தில் இடம் பெற்றிருந்த அஸ்வினி சந்திரசேகர், ரோகிணி, மைம் கோபி உள்ளிட்ட கலைஞர்களும், அதே தொழில் நுட்பக் குழுவினரும்தான் இந்தப் படத்திலும் இடம் பெற்றுள்ளனர்.

ஒய்.ஜி.மகேந்திரன், நடிகர் நாசரின் சகோதரர் அஹ்மத் உள்ளிட்ட வெகு சிலர்தான் இந்த இரண்டாம் பாகத்தில் புதிதாக இணைந்துள்ளனர்.

வரும் ஆகஸ்ட்-19-ம் தேதி இந்தப் படம் நேரடியாக ஆஹா’ ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

இந்த நிலையில் படத்தின் நாயகனான வெற்றி இந்த ‘ஜீவி’ இரண்டாம் பாகத்தில் நடித்த அனுபவங்கள் குறித்து பேசும்போது, “எட்டு தோட்டாக்கள்’, ‘ஜீவி’, ‘ஜீவி-2’ என சீரியஸான படங்களில் நடித்தால்தான் ரசிகர்களைக் கவர முடியும். முதலில் ஒரு பார்வையாளராக, படம் பார்க்கும்போது எனக்கு போர் அடிக்காமல் இருக்க வேண்டும்.

நாலு நண்பர்கள், ஒரு காதலி, டூயட் இவற்றுடன் வலுவான கதையும் இருந்தால் அதிலும் நடிப்பதற்கு எனக்கு தயக்கம் இல்லை. நான் தற்போது நடித்துவரும் பம்பர்’ படம் அப்படிப்பட்ட ஒன்றுதான்.

எங்கள் குழு ‘ஜீவி’ படம் இவ்வளவு வரவேற்பு பெறும் என்றோ அதற்கு இரண்டாம் பாகம் உருவாகும் என்றோ நாங்கள் நினைத்தே பார்க்கவில்லை என்று கூறி தங்களது வியப்பை வெளிப்படுத்தினார்கள்.

படத்தில் இடம் பெற்றதுபோல முக்கோண விதி, தொடர்பியல் போன்ற விஷயங்களை நிஜத்தில் நான் உணர்ந்ததில்லை. ஆனால் கர்மா என ஒன்று இருப்பதையும், நாம் ஏதாவது தவறு செய்தால் நமக்கு அது திருப்பி அடிக்கும் என்பதையும் நம்புகிறேன். அதே சமயம் ஜீவி’ படம் பார்த்துவிட்டு நிறைய பேர், தங்கள் வாழ்க்கையில் இது போன்று நிகழ்வுகள் நடந்திருப்பதாக கூறியபோது ஆச்சரியப்பட்டேன்.

லாக் டவுன் சமயத்தில்தான் ‘ஜீவி-2’ எடுக்கலாம் என இயக்குநர் கோபி முடிவு செய்தார். அதே சமயம் இந்த படத்தின் முதல் பாகத்திற்கு கதை எழுதிய பாபு தமிழ் அடுத்ததாக தனியாக புதிய படம் இயக்கும் வேலைகளில் இறங்கி விட்டதால் ஜீவி-2’ படத்தில் அவரால் பங்களிக்க இயலவில்லை. அதனால் கோபிநாத்தே இந்த 2-ம் பாகத்திற்கான முழு ஸ்கிரிப்ட்டையும் எழுதி விட்டார்.

ஜீவி-2’ எடுக்கப் போகிறோம் என்று சொன்னதுமே எல்லோருமே சொன்ன ஒரே பதில் ‘நாங்கள் வெயிட்டிங்’ என்பதுதான். இந்தப் படத்தில் நடித்தது ஒரு ரீ-யூனியன் போலதான் இருந்தது. இதன் படப்பிடிப்பை திட்டமிட்டு அழகாக அதே வேளையில் படத்தின் பிரமிப்பில் குறைவில்லாமல் முடித்துள்ளோம்.

இந்த இரண்டாம் பாகத்தில் ஒய்.ஜி.மகேந்திரன் போன்ற சீனியர் நடிகருடன் நடித்தது மகிழ்ச்சியாக இருந்தது. முதல் பாகத்தில் போலீஸ் அதிகாரியாக இடம் பெற்ற மலையாள நடிகர் அணில் முரளியின் மறைவு துரதிஷ்டவசமானது. அவருக்குப் பதிலாக அந்த கதாபாத்திரத்தில் இந்த படத்தில் நடிகர் நாசரின் சகோதரர் அஹ்மத்  நடித்துள்ளார்.

இப்போது ஜீவி-2’ படம் முடிந்ததுமே இதற்கு மூன்றாம் பாகம் உருவாகுமா என பலரும் கேட்க ஆரம்பித்து விட்டார்கள். இந்தப் படத்திற்கு கிடைக்கும் ரசிகர்களின் வரவேற்பும், விமர்சனங்களும்தான் அதை முடிவு செய்யும்.

இந்த படத்தில் நடித்து முடித்தபோது ஒரு படத்தின் இரண்டாம் பாகத்தை மிக திருப்தியாக முடித்துள்ளோம் என்கிற எண்ணம்தான் எழுந்தது. மீண்டும் இதே குழுவுடன் இணைந்து இன்னொரு படத்தில் பணியாற்றும் ஆசையும் இருக்கிறது. ஆனால் அது இதன் மூன்றாம் பாகமாக இருக்குமா என்பது எனக்கே தெரியாது.

ஆஹா’ ஓடிடி தளத்தில் வரும் ஆகஸ்ட் 19-ம் தேதி இந்தப் படம் வெளியாகிறது. முதல் பாகம் போல் இதுவும் ரசிகர்களை இழுத்துக் கொள்ளும் என்று நம்புகிறேன்..” என்றார்.

- Advertisement -

Read more

Local News