பிரபல நடிகை ஹன்சிகா, தனது நீண்ட நாள் நண்பரும் தொழில் ரீதியாக நெருக்கமானவருமான சோஹைல் கதுரியா என்பவரை காதலித்து கடந்தாண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்கள் திருமணம் அரச முறைப்படி மிகவும் பாரம்பரியமாக ஒருவார காலம் கோலாகலமாக நடைபெற்றது.
இதன் பின் ஓடிடி தளத்தில் “லவ் ஷாதி டிராமா” எந்த தொடர் மூலம் தன்னுடைய வாழ்க்கை, காதல், திருமணம் ஆகியவற்றை பற்றி பேசியிருந்தார்.
இந்நிலையில், ஹன்சிகாவை பற்றி சர்ச்சை கிளம்பியது. அவர், குழந்தை நட்சத்திரமாக நடித்துக் கொண்டிருக்கும் போதே எப்படி அவர் திடீரென வளர்ந்தார் என்று தெலுங்கு படத்தில் ஹீரோயினாக நடிக்கும் போதே கேள்விகள் எழுப்பப்பட்டதாம்.
மேலும் அவரது தாய் ஹார்மோன் ஊசி மூலம் தான் ஹன்சிகாவை வளர்த்திருக்கிறார் என்று பல வதந்திகள் பரவின.
இதை பற்றி அந்த ஓடிடி தளத்தில் பேசிய அவரது தாய் “இந்த விஷயம் உண்மையென்றால் டாடா, மற்றும் பிர்லாவை விட நான் தான் பணக்காரியாக இருந்திருப்பேன். உங்களுக்கு வேகமாக வளரும் வேண்டும் என்றால் என்னிடம் வாருங்கள்” என்று சற்று கோபமாக பதில் அளித்தார்.